தொடர்ந்து சரிவுப் பாதையில் இந்திய ஏற்றுமதி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய ஏற்றுமதி தொடர்நது 3வது மாதமாக கடந்த டிசம்பரில் 1.1 சதவீதம் சரிவு கண்டுள்ளது. இதே நிலை நீடித்தால் வரும் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி துறையில் இருக்கும் 1 கோடி பேர் வேலை இழக்கும் அபாயம் உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

உலக பொருளாதார மந்தநிலையை தொடர்ந்து இந்தியாவின் ஏற்றுமதி கடந்த டிசம்பர் மாதம் கடந்த ஆண்டை விட 1.1 சதவீதம் குறைந்து 12.7 பில்லியன் டாலர் என்ற அளவில் இருந்தது.

அதேநேரத்தில் இந்தியாவின் இறக்குமதி டிசம்பர் மாதத்தில் 8.8 சதவீதம் உயர்ந்து 20.3 பில்லியன் டாலராக இருந்தது. இதனால் வர்த்தக பற்றாக்குறை 7.6 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

இது குறித்து இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பு கூறுகையில், விவசாயத்துக்கு அடுத்து, ஏற்றுமதி துறையில் தான் அதிக அளவிலான இந்தியர்கள் ஈடுபடுகின்றனர். ஏற்றுமதி தொடர்பான நிறுவனங்களில் 15 கோடி பேர் இருக்கின்றனர்.

தற்போதுள்ள ஏற்றுமதி துறை சரிவு நிலை நீடித்தால் ஏற்றுமதி துறையில் 1 கோடி பேருக்கு வேலையிழப்பு ஏற்படும். இது வரும் பாராளுமன்ற தேர்தலில் மன்மோகன் அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்கிறது அது.

டெல்லியை சேர்ந்த பொருளாதார ஆராய்ச்சி நிறுவனத்தை பைய் பனான்டிகர் கூறுகையில், உலக பொருளாதாரம் நல்ல நிலைக்கு வராதபட்சத்தில் ஏற்றுமதியில் எந்த முன்னேற்றமும் இருக்காது என்றார்.

இந்தியாவை போல் மற்ற ஆசிய நாடுகளின் வளர்ச்சியும் பெரிதும் பாதிக்கப்பட்டு்ள்ளது. சீனாவின் ஏற்றுமதி 2.8 சதவீதம் குறைந்துள்ளது. சிங்கப்பூரின் ஏற்றுமதி 6 ஆண்டுகளில் இல்லாத வகையில் சரிவு கண்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+