கொடைக்கானல் சர்ச்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
திண்டுக்கல்: கொடைக்கானலில் உள்ள 4 சர்ச்களுக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் காவல் நிலையத்துக்கு சனிக்கிழமை அன்று மர்ம கடிதம் ஒன்று வந்தது.
அந்த கடிதத்தில் கொடைக்கானலில் உள்ள நான்கு கிறிஸ்துவ தேவாலயங்களில் குண்டுகள் வெடிக்கும் என எழுதப்பட்டிருந்தது. அதில் அனுப்பியவர் முகவரி இல்லை.
இதனையடுத்து உஷாரான போலீசார் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த தேவாலயம் அருகில் மோப்ப நாய்களுடன் வெடி குண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். தீவிர சோதனையின் போது வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம கடிதம் எழுதி வெடி குண்டு மிரட்டல் விடுத்த நபரை வலை வீசி தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், தேவாலயங்களில் வழக்கமாக நடைபெறும் பிரார்த்தனை கூட்டங்களுக்கு தடை ஏதும் ஏற்படுத்தப்படவில்லை. இதனால் வழக்கம் போல் பிராத்தனை கூட்டங்கள் நடைபெற்றன.












Click it and Unblock the Notifications