சிறுமிக்குக் கல்யாண ஏற்பாடு - தடுத்து நிறுத்திய தர்மபுரி கலெக்டர் அமுதா!
தருமபுரி: தருமபுரி மாவட்டம் அரூர் அருகே நேற்று நடைபெற இருந்த சிறுமியின் திருமணம் மாவட்ட கலெக்டர் அமுதாவால் தடுத்து நிறுத்தப்பட்டது.
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ளது கடம்பர அள்ளி கிராமம்.
இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் வெண்ணிலா. இவருக்கு 16 வயதுதான் ஆகிறது. திப்பம்பட்டி அரசினர் பள்ளியில் 10 -ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவருக்கும், பேதாதம்பட்டியைச் சேர்ந்த துரைவளவன் என்பவருக்கும் நேற்று பேதாதம்பட்டி மணமகன் வீட்டில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் அமுதாவுக்கு தகவல் கிடைத்து.
இதனையடுத்து மாவட்ட கலெக்டர் அமுதா, இளம் பெண் வெண்ணிலாவின் திருமணத்தை தடுத்து நிறுத்த அரூர் டிஎஸ்பி மோகனுக்கு உத்தரவிட்டார்.
இதன் பேரில் மணமகன் மற்றும் மணமகள் வீட்டாரிடம் பேசிய போலீசார் வெண்ணிலாவின் பால்ய திருமணம் சட்ட விரோதமானது எனக் கூறி அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
மாவட்ட கலெக்டர் அமுதாவின் துரிதமான நடவடிக்கைக்கு பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் பாராட்டு தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications