For Quick Alerts
For Daily Alerts
Just In
திருச்சியில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகம் தாக்கப்பட்டது
திருச்சி: திருச்சியில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான அலுவலகத்தை சிலர் தாக்கி சேதப்படுத்தினர்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு ஹோட்டலில், இலங்கை அரசுக்குச் சொந்தமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன அலுவலகம் உள்ளது.
நேற்று மாலை 10க்கும் மேற்பட்டோர் இங்கு வந்தனர். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அலுவலகத்திற்குச் சென்ற அவர்கள்ஸ, இலங்கை அரசுக்கும், ராணுவத்திற்கும் எதிராக கோஷமிட்டபடி தாக்குதலில் இறங்கினர்.
அலுவலக கண்ணாடி கதவுகள், விளம்பர போர்டுகளை தாக்கி சேதப்படுத்தினர். கதவுகளும் அடித்து நொறுக்கப்பட்டன.
இதனால் அலுவலகத்திற்குள் பணியில் இருந்த இரு ஊழியர்களும் அங்கிருந்து அலறி அடித்து ஓடினர். பின்னர் தாக்குதல் நடத்தியவர்கள் சென்று விட்டனர்.
போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Comments
Story first published: Tuesday, February 3, 2009, 8:58 [IST]