For Daily Alerts
Just In
வாஜ்பாய் சுகவீனம் - மருத்துவமனையில் அனுமதி
டெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு கடந்த பல மாதங்களாகவே வாஜ்பாய் தீவிர அரசியலிலிருந்து விலகியிருக்கிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவரை அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
வாஜ்பாய் தனது இரண்டு மூட்டுக்களிலும் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டுள்ளார். அது முதலே அவர் தீவர அரசியலில் பங்கேற்காமல் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Wednesday, February 4, 2009, 10:22 [IST]