இலங்கை தமிழரை பாதுகாக்க முல்லைதீவுக்கு படகு பயணம்: வக்கீல்கள்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் 9ம் தேதி படகு மூலம் முல்லைதீவுக்கு செல்லப்போவதாக தூத்துக்குடி வக்கீல்கள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்க கோரி தமிழகம் முழுவதும் வக்கீல்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.. இந்நிலையில் இலங்கை பிரச்சனை குறித்து ஆலோசிப்பதற்காக தூத்துக்குடி வக்கீல்கள் சங்கத்தின் அவசர கூட்டம் அதன் தலைவர் பிரபு தலைமையில் நடந்தது.

கூட்டத்தி்ல் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் நடத்தும் அனைத்து போராட்டங்களுக்கும் வக்கீல்கள் சங்கம் ஆதரவு அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் ரயில் மறியல் போராட்டம் நடத்துவது மற்றும் 7ம் தேதி நடைபெறும் பேரணியில் பங்கேற்பது, அதன் பிறகும் இப்பிரச்சனைக்கு தீ்ர்வு காணப்படாவிட்டால் வரும் 9ம் தேதி தூத்துக்குடியில் இருந்து படகுகள் மூலம் முல்லைதீவு செல்வது என்பது உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+