சிங்கள வீரர்கள் திருப்பி அனுப்பப்பட்டு விட்டனர் - தமிழக அரசு
சென்னை: சென்னை தாம்பரம் விமானப்படை பயிற்சி நிலையத்திற்கு பயிற்சிக்கு வந்த இலங்கை விமானப்படை வீரர்களை தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு திருப்பி அனுப்பி விட்டதாக, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி கூறியுள்ளார்.
இதுகுறித்து நேற்று இரவு தமிழக அரசு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில்,
இலங்கை விமானப்படை வீரர்கள் சிலர் சென்னை தாம்பரத்தில் உள்ள விமானப்படை பயிற்சி கூடத்திற்கு வந்திருப்பதாகவும், அவர்களுக்கு பதிவு வழங்குமாறும் தாம்பரம் விமானப்படையினர் சேலையூர் போலீஸ் நிலையத்தை கேட்டுக்கொண்ட செய்தி முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து, அவரது அறிவுரையின்படி, தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி மத்திய அரசின் பாதுகாப்பு துறையுடன் தொடர்புகொண்டு, அவர்களை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
முதல்-அமைச்சர் கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு அந்த இலங்கை விமானப்படை வீரர்களை தமிழகத்திலிருந்து திரும்ப அனுப்ப உத்தரவிட்டதுடன் அந்த செய்தியையும் முதல்-அமைச்சருக்கு தெரிவிக்குமாறு கூறியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications