சத்யம் புதிய சேர்மன் கிரண் கார்னிக்!
Subscribe to Oneindia Tamil

மத்திய கம்பெனி விவகாரங்கள் துறை அமைச்சர் பிரேம்சந்த் குப்தா இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
ஐடி நிறுவனங்களின் தலைமைப் பீடமாகத் திகழும் நாஸ்காம் அமைப்பின் தலைவராக சில ஆண்டுகள் பணியாற்றினார் கிரண் கார்னிக். அவரது பதவிக் காலத்தில்தான் இந்திய அவுட்சோர்ஸிங் துறையே சிறப்பாக இயங்கியதாகச் சொல்கிறார்கள். நாஸ்காம் அமைப்பு மூலம் இந்திய ஐடி துறையில் பெரும் மாறுதல்கள் ஏற்பட கிரண் கார்னிக்கும் ஒரு காரணம் என்பதால், சத்யம் தலைவராக அவரை நியமித்திள்ளது மத்திய அரசு.
கிரண் கார்னிக் தலைமையில் சத்யம் தன் அனைத்து பின்னடைவுகளிலிருந்தும் மீண்டு வரும் என புதிய இயக்குநர் குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
சத்யம் சாம்ராஜ்யம் சரிந்த உடன், அந்த நிறுவனத்துக்கு அரசு தரப்பில் நியமிக்கப்பட்ட முதல் மூன்று இயக்குநர்களில் கிரண் கார்னிக்கும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications