நாட்டை பிளவுபடுத்துகிறது பாஜக - சோனியா குற்றச்சாட்டு
டெல்லி: நாட்டின் ஒற்றுமைக்கும், மதசார்பின்மைக்கும், சமூகத்துக்கும், பொருளாதாரத்துக்கும் பங்கம் விளைவித்து வருகிறது பாஜக. நாட்டை பிளவுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என காங்கிரஸ் தலைவர் சோனியா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்கும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய கூட்டம் டெல்லியில் நடக்கிறது. இதில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா கலந்து கொண்டார்.
அப்போது சோனியா கூறுகையில்,
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி நாட்டின் ஒற்றுமைக்கும், மதசார்பின்மைக்கும், சமூகத்துக்கும், பொருளாதாரத்துக்கும் பங்கம் விளைவித்து வருகிறது.
அவர்கள் நாட்டை பிளவுப்படுத்த பார்க்கிறார்கள். நமது நாடு சமூக நீதிக்கும், மத ஒற்றுமைக்கும் பாடுபடும் நாடு. நாட்டின் இறையாண்மை, வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு ஆகியவையே காங்கிரசின் முக்கிய நோக்கம்.
உலகமே பொருளாதார நெருக்கடியில் சிக்கி வரும் நிலையில் இந்தியா அதை நன்றாக சமாளித்து வருகிறது என்றார் சோனியா.












Click it and Unblock the Notifications