பங்குச் சந்தையில் இன்று ஓஹோ!!
Subscribe to Oneindia Tamil
மும்பை: இந்த மாதத்தின் அதிகபட்ச குறியீட்டெண் உயர்வைச் சந்தித்துள்ளது இந்தியப் பங்குச் சந்தை சென்செக்ஸ். ஆம், வாரத்தின் துவக்க நாளான இன்று மட்டும் 283 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 9583 புள்ளிகளில் நிலைபெற்றது.
இன்று காலை வர்த்தகம் துவங்கியதிலிருந்தே பங்குகளின் விலைகள் ஏறுமுகத்தில் இருந்தன. குறிப்பாக ஜெய்பிரகாஷ் அஸோஸியேட்ஸ், டாடா ஸ்டீல், எச்டிஎப்சி வங்கி, ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்சர் ஆகியவற்றின் பங்குகள் நல்ல விலைக்கு கைமாறின.
ஓஎன்ஜிஸி நிறுவனத்தின் பங்குகள் இன்று 4.5 சதவிகிதம் வரை உயர்ந்து, கைமாறின.
தேசிய பங்குச் சந்தை நிப்டியிலும் இன்று நல்ல உயர்வு தெரிந்தது.
வர்த்தகம நேர முடிவில் சென்செக்ஸ் 283 புள்ளிகள் உயர்ந்து 9583-ஆகவும், நிப்டி 76.80 புள்ளிகள் உயர்ந்து 2919 ஆகவும் நிலைபெற்றது.












Click it and Unblock the Notifications