ஆஸ்திரேலிய காட்டுத் தீ பலி 173 ஆக உயர்வு
ஹீல்ஸ்வில்லி : தென் கிழக்கு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத் தீக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 170ஐ தாண்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தின் தலைநகர் மெல்போர்னுக்கு அருகே ஹீல்ஸ்வில்லி நகர் இருக்கிறது. இங்குள்ள சரணாலயம் ஆஸ்திரேலியாவின் பூர்வீக விலங்குகளின் பாதுகாவலனாக விளங்கி வருகிறது.
இங்கு தற்போது கோடை வெயில் கொளுத்தி வருகிறது. 100 டிகரிக்கு மேல் வெயில் அடிப்பதால் மனிதர்கள் வெளியில் நடமாட முடியவில்லை.
இந்நிலையில் இங்குள்ள காட்டுப் பகுதியில் திடீரென தீப்பிடித்துக் கொண்டது. காற்றும் 100 கி.மீ., வேகத்துக்கு மேல் வீசியதால் காட்டுத் தீ படுவேகமாக பரவியது.
காற்று அடிக்கடி தனது திசையை மாற்றி கொண்டதால், காட்டுத் தீ நாலாப்புறமும் பரவியது. அடுத்து எங்கு செல்லும் என கணித்து செயல்பட முடியாததால் அங்கிருந்த மக்கள் வெளியேற முடியாமல் தீக்கு பலியாயினர். தீயின் உக்கிரம் அதிகமிருந்ததால் தீயணைப்பு வீரர்களின் கடும் முயற்சிக்கு போதிய பலன் கிடைக்கவில்லை.
இவ்விபத்தில் இதுவரை 173 பேர் பலியாகி உள்ளனர். காட்டுப் பகுதியில் இருந்த பல வகை விலங்குகளும் தீயில் உடல் கருகி இறந்தன.
இதற்கு அங்கு வசித்தவர்களுக்கு காட்டுத் தீ குறித்து சரியான தகவல் கிடைக்காததே முக்கிய காரணம் என தெரிகிறது. அமெரிக்காவில் இருப்பதை போல் எச்சரிக்கை மணிகள் இங்குள்ள வீடுகளில் இல்லை. இதனால் பலரை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது என்கிறார் அதிகாரி ஒருவர்.
காட்டுத் தீயின் உக்கிரம் அதிகரிக்கும் என கருதிய ஆஸ்திரேலியா மேரிஸ்வில்லி, கிங்ஸ்லேக் ஆகிய இரு நகரங்களுக்கும் செல்ல மக்களுக்கு தடை விதித்துள்ளது.
இது குறித்து தேசிய நெருப்பு தடுப்பு ஆணையத்தின் தலைவர் ரசல் ரீஸ் கூறுகையில், அடுத்த முறை இது போன்ற கோர சம்பவம் நடக்காமல் பார்த்து கொள்வோம். அதற்கு தேவையான மாற்று முறைகளை விரைவில் கொண்டு வருவோம்.
தற்போது விக்டோரியா மாநிலத்தில் மக்களுக்கு எச்சரிக்கை வழங்கும் நடைமுறை எதுவும் இல்லை. எங்களது இணையதளத்தில் மட்டும் தொடர்ந்து காட்டு தீ குறித்த விவரங்களை வெளியிட்டு வருகிறோம். அவர்கள் என்ன் செய்ய வேண்டும் என்பது தொடர்பாக ஆலோசனைகள் வழங்கி வருகிறோம் என்றார் ரசல்.
ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ருட் கூறுகையில், தீ நமக்கு மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. அதன் வேகம், உக்கிரம், அழிக்கும் திறன், தனது திசையை மாற்றும் போக்கு என அனைத்தும் சேர்ந்து பல உயிர்களை பழி வாங்கிவிட்டன. அது கருணை காட்டவில்லை. அது நம்மை திகைக்க செய்துவிட்டது என்றார்.
அமெரிக்க அதிபர் ஒபாமா விபத்தில் இறந்தவர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications