தங்கம்: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.176 கூடியது!

கடந்த ஜனவரி 24ம் தேதி ஒரு கிராம் தங்கம் ஆயிரத்து 301 ரூபாய்க்கும், ஒரு பவுன் ரூ. 10,408க்கு விற்பனையானது.
இதைத் தொடர்ந்து தங்கத்தின் விலை எக்கச்சக்கமாய் ஏறுவதும், பின்னர் சற்றே குறைவதுமாக கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ. 1,312க்கு விற்பனையானது.
சவரன் ரூ.10,672:
இந் நிலையில், நேற்று தங்கம் விலை மீண்டும் விண்ணைத் தொடும் விலைக்கு உயர்ந்துஒரு கிராம் ரூ. 1,334க்கு விற்கப்பட்டது. ஒரு பவுன் ரூ.10,672.
ஒரே நாளில் தங்கம் ஒரு பவுன் ரூ.176 அதிகரித்துள்ளது. விலை உயர்வால் நேற்று சென்னை தியாகராயர் நகரில் உள்ள கடைகளில் கூட்டம் வழக்கத்தை விட குறைவான கூட்டமே இருந்தது.
தங்கத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் தங்கத்தின் விலை உயர்ந்து வருவதாக பொருளாதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, முதலீட்டுதாரர்கள் பத்திரமான முதலீடு என்ற கணக்கில் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். இதனால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது என்கின்றனர்.












Click it and Unblock the Notifications