மீண்டும் காங்கிரசில் மாஜி முதல்வர் பங்காரப்பா
டெல்லி: கர்நாடகத்தில் காவிரி்க் கலவரத்தின்போது முதல்வராக இருந்து தமிழர்கள மீதான தாக்குதலை தடுக்கத் தவறியதோடு, தாக்குதலை தூண்டிவிடும் வகையிலும் பேசி 'நல்ல பேர்' வாங்கிய பங்காரப்பா மீண்டும் காங்கிரசில் இணைந்துள்ளார்.
காங்கிரஸ் மீண்டும் ஆட்சியமைத்தபோது இவரை முதல்வராக விடாததால் கட்சியை விட்டு விலகி தனிக் கட்சி கண்ட பங்காரப்பா பின்னர் சமாஜ்வாடிக் கட்சியி் இணைந்தார். இந் நிலையில் அதிலிருந்து விலகி மீண்டும் காங்கிரசில் ஐக்கியமாக பல ஆண்டுகளாகவே முயன்று வந்தார்.
மக்களவைத் தேர்தல் வருவதையொட்டி அவரை மீண்டும் கட்சியில் இணைய அனுமதித்துவிட்டது காங்கிரஸ் தலைமை.
இதையடுத்து சமாஜ்வாடி கட்சி சார்பில் ஷிமோகாவில் போட்டியிட்டு வென்ற தனது லோக்சபா எம்பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரசில் இணைந்தார்.
டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் இதை இன்று நிருபர்களிடம் பங்காரப்பா தெரிவித்தார். அவர் கூறுகையில்,
கர்நாடகத்தில் பாஜக ஆட்சியமைத்தது நாட்டுக்கு நல்லதல்ல. மதசார்பற்ற சக்திகள் மீண்டும் ஒன்று சேர வேண்டிய நேரம் வந்துவிட்டது. இதனால் தான் காங்கிரசில் இணைகிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications