தமிழர்கள் வெளியேற 'பாதுகாப்பு வளையம்'

இதற்கு முன்பு பாதுகாப்பு வளையங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளை தனது பாதுகாப்பு வளைய பட்டியலிலிருந்து ராணுவம் நீக்கி விட்டதாம்.
விடுதலைப் புலிகள் பகுதியிலிருந்து வெளியேறி தமிழர்கள் அரசுப் பகுதிக்கு வர வேண்டும். இதற்காக பாதுகாப்பு வளையப் பகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அங்கு வரும் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படாது என இலங்கை அரசும், ராணுவமும் அறிவித்தன.
இதை நம்பி பாதுகாப்பு வளையப் பகுதிகளுக்கு வந்த அப்பாவித் தமிழர்களை குவியல் குவியலாக கொன்று குவித்துக் கொண்டிருக்கிறது இலங்கை ராணுவம்.
இலங்கை ராணுவத்தின் இந்த செயலுக்கு ஐ.நா. சபை உள்பட பல்வேறு உலக நாடுகள், மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இருப்பினும் இதைக் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து பாதுகாப்பு வளையப் பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருகிறது ராணுவம்.
இந்த நிலையில் புதிய பாதுகாப்பு வளையப் பகுதிகளை உருவாக்கியிருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது. பழைய பாதுகாப்பு வளையப் பகுதிகளை கைவிட்டுள்ளதாகவும் அது கூறியுள்ளது.
இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா கூறுகையில், பழைய பாதுகாப்பு வளையப் பகுதிகளுக்குள் தமிழர்கள் வந்து விடாமல் புலிகள் தடுத்து வருகின்றனர். மேலும், அப்பகுதிக்கு வரும் தமிழர்கள் மீதும் புலிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
எனவே புதிய பாதுகாப்பு வளையப் பகுதிகளை ராணுவம் உருவாக்கியுள்ளது என்றார் அவர்.
வன்னிப் பகுதியில் போர் முனையில் கிட்டத்தட்ட 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் சிக்கியுள்ளனர். அவர்களின் நிலை பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.
இவர்கள் வெளியேறுவதற்காக ஜனவரி 21ம் தேதி முதல் பாதுகாப்பு வளையப் பகுதியை ராணுவம் அறிவித்தது. ஆனால் அப்பகுதிக்கு வந்த நூற்றுக்கணக்கான தமிழர்களை ராணுவம் பீரங்கித் தாக்குதல் நடத்தி கொன்று குவித்தது நினைவிருக்கலாம்.
தற்போது புதிதாக ராணுவம் அறிவித்துள்ள பாதுகாப்பு வளையப் பகுதி, வட கிழக்கு கடற்கரையோரம் 12 கிலோமீட்டர் தொலைவிலான பகுதியாகும். அங்கு ஏற்கனவே தமிழர்கள் வரத் தொடங்கி விட்டதாகவும் உதய நாணயக்காரா கூறியுள்ளார்.
இந்த நிலையில், விடுதலைப் புலிகளின் பகுதிகளுக்குள் மேலும் முன்னேறியுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. சுதந்திராபுரத்தில் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கிட்டங்கியைக் கைப்பற்றியுள்ளதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.
-
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
"கோடீஸ்வரர்".. ராஜ்யசபா எம்பியாகும் தேமுதிகவின் எல்கே சுதீஷ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர் -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம் -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications