இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் 17ம் தேதி மனித சங்கிலி போராட்டம்: திருமாவளவன்.
சென்னை: இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் வருகிற 17ம் தேதி கும்மிடிப்பூண்டி முதல் கன்னியாகுமரி வரை பிரமாண்ட மனித சங்கிலிப் போராட்டம் நடைபெறும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கையில் தமிழர்கள் மீது சிங்கள ராணுவம் 24 மணி நேரமும் தாக்குதல் நடத்தி வருகிறது இத்தாக்குததில் அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்று குவித்து வருகிறார்கள்.
ஈழத் தமிழர்களின் பாதுகாப்புக்கான பொறுப் பையும் இந்திய அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும். மற்றும் சிங்கள அரசைப் பணிய வைத்து தமிழீழத்தில் ஓர் அமைதிச் சூழலையும் அரசியல் தீர்வையும் கொண்டு வர இந்திய அரசு விரைந்து நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும்.
தமிழக மக்களின் உணர்வு களையும் மதித்து சிங்கள இனவெறிப் போரை நிறுத்த இந்திய அரசு ஆவன செய்ய வேண்டும். இலங்கை தமிழர் பாது காப்பு இயக்கத்தின் சார்பில் வரும் 17 ஆம் தேதி கும்மிடிப்பூண்டியலிருந்து குமரி முனை வரையிலான மனிதச் சங்கிலி அறப்போர் நடைபெறும்.
இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அனைத்துப் பிரிவு தொண்டர்களும் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications