பீடி..தாடியில் தீ பரவி முதியவர் பரிதாப சாவு
சென்னை: சென்னை அருகே பீடி பிடித்த முதியவர், பீடித் தீ, தாடியில் பற்றி தீப்பிடித்துக் கொண்டதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை அருகே செம்பரம்பாக்கம் கன்னடபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பசுபதி (70).
வயதானாலும் பீடி பிடிக்கும் பழக்கத்தை இவரால் விட முடியவில்லை. நேற்று மாலை வீட்டுக்கு அருகே உள்ள பெட்டிக் கடைக்குப் போய் பீடி வாங்கி பற்ற வைத்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக பசுபதியின் நீண்ட தாடியில் பீடியிலிருந்து வந்த தீப்பொறி பற்றிக் கொண்டது. இதில் வேகமாக தீ பரவி முகத்தை வியாபித்தது.
இதனால் நிலை குலைந்த பசுபதி அலறித் துடித்தார். சற்று நேரத்திம் முகத்தைக் கருக்கிய தீ தலைக்கும் பரவி கொளுந்து விட்டு எரிந்தது.
படுகாயமடைந்து அலறித் துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தீயை அணைத்து கீழ்ப்பாக்கம் கொண்டு வந்து அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
முதியவர் என்பதால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார் பசுபதி.












Click it and Unblock the Notifications