இலங்கை கொடுமை: ஜெனீவாவில் தமிழ் வாலிபர் தீ்க்குளித்து சாவு
ஜெனீவா: ஜெனீவாவில் உள்ள ஐ.நா. அலுவலகம் முன் இலங்கைத் தமிழ் வாலிபர் தீக்குளித்தார்.
இங்கிலாந்தில் வசித்து வந்த முருகதாசன் (26) நேற்றிரவு 8.20 மணியளவில் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் உள்ள ஐ.நா. அலுவலகம் எதிரே உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் சில நிமிடங்களிலேயே அவர் அலறித் துடித்து பலியானார்.
தனது தற்கொலை தொடர்பாக ஆங்கிலத்திலும் தமிழிலும் அவர் 7 பக்க கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார். தீக்குளித்த இடத்திலிருந்து 10 மீட்டர் தொலைவில் ஒரு பையில் இந்தக் கடிதத்தை சுவிஸ் போலீசார் கையகப்படுத்தினர்.
மேலும் முன்னதாக இந்தக் கடிதத்தை சுவிட்சர்லாந்தில் உள்ள பல தமிழ் பத்திரிக்கையாளர்களும் அனுப்பி வைத்துள்ளார். முருகதாசன் மரணித்த பின் இந்தக் கடிதங்கள் அவர்களுக்குக் கிடைத்தன.
அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ள சாரம்சம்: இலங்கையில் தமிழர்கள் சந்தித்து வரும் சொல்ல முடியாத கொடுமைகளை உலக சமுதாயம் மனித நேய கண்ணோட்டத்துடன் பார்க்க எனது உடலிலும், இதயத்திலும் ஆன்மாவிலும் எரியும் இந்தத் தீயின் நாக்குகள் உதவும் என நம்புகிறேன்.
இந்த நிமிடம் வரை இலங்கையில் அந் நாட்டு அரசாங்கம் நடத்தி வரும் மாபெரும் கொடுமைகளை சர்வதேச சமுதாயம் அமைதியாக அங்கீகரித்துக் கொண்டே உள்ளது. அங்கு நடப்பது அரசு தீவிரவாதம் என்று கூறப்பட்டுள்ளது.
முருகதாசனின் குடும்பத்தாரை அடையாளம் காணும் பணியில் சுவிஸ், இங்கிலாந்து போலீசார் இறங்கியுள்ளனர்.
முருகதீசன் தீக்குளித்ததை 3 பொது மக்களும் ஒரு போலீஸ் அதிகாரியும் நேரில் பார்த்துள்ளனர். அவர்கள் சுதாரிப்பதற்குள் முருகதாசன் பற்றி எரிய ஆரம்பித்துவிட்டார்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்













Click it and Unblock the Notifications