சத்யம் தடையை நீக்க உலக வங்கி பரிசீலனை!!
டெல்லி: சத்யம் மீதான 8 ஆண்டுகால தடையை நீக்குவது குறித்து பரிசீலிப்பதாக உலக வங்கி அறிவித்துள்ளது. உலக வங்கியின் கணக்குகளைப் பராமரித்து வந்த நிறுவனங்களுள் சத்யமும் ஒன்று.
இடையில், சத்யம் கணக்கை பாரமரிக்கும் முறை சரியில்லை என்றும், நிறைய மோசடி நடந்துள்ளதாகவும் கூறி அதன் மீது 8 ஆண்டுகளுக்குத் தடை விதித்திருந்தது உலக வங்கி. 2016-ம் ஆண்டு வரை இந்தத் தடை தொடர்கிறது.
இந்தத் தகவல் வெளியான பிறகுதான் சத்யம் நிறுவன நிலை படுமோசமானது. பங்குகள் மதிப்பும் கடுமையாகச் சரிந்தது. அதன் தொடர்ச்சியாக பல விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து, கடைசியில் ராமலிங்க ராஜூ செய்த ரூ.7800 கோடி மோசடிகளும் வெளியாகின.
இதற்கிடையே இந்தத் தடையை மறுபரிசீலனை செய்யப் போவதாக உலக வங்கி அறிவித்துள்ளது. சத்யம் நிறுவன இயக்குநர்கள் குழு சீரமைக்கப்பட்டுள்ளதாலும், புதிய நிர்வாகத்தின் மீது நம்பிக்கை பிறந்துள்ளதாகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் உலக வங்கி அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications