புதுச்சேரி அருகே 4 நாட்டு வெடிகுண்டுப் புதையல் சிக்கியது

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரி, முதலியார்பேட்டை அருகே ரயில் தண்டவாளத்தில் பை நிறைய 7 நாட்டு வெடிகுண்டுகள் சிக்கின.

புதுச்சேரியில் ரவுடிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அவர்களுக்கிடையிலான கோஷ்டி மோதலில் சரமாரியாக வெடிகுண்டுகளைத் தாக்கி அடித்துக் கொள்கின்றனர். இதனால் புதுவை மக்கள் பீதியில் மூழ்கியுள்ளனர்.

இவர்களின் சண்டையில் சிலர் கொல்லப்பட்டுள்ளனர். இதையடுத்து ரவுடிகளை வேட்டையாட போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவில் புதுவை போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் முதலியார்பேட்டை ரெயில்வே கேட் அருகே உள்ள ரோடியர்மில் திடலில் போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது பிளாஸ்டிக் பை ஒன்றில் மர்ம பொருட்கள் இருந்தன.

போலீசார் அந்த பையை பிரித்து பார்த்தபோது அதில் 7 நாட்டு வெடிகுண்டுகள் என்பது தெரியவந்தது. பின்னர் அதனை செயல் இழக்க செய்தனர். சம்பவ இடத்துக்கு போலீஸ் ஐ.ஜி. வாசுதேவராவ் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.

இதையடுத்து அப்பகுதி முழுவதிலும் போலீஸார் திவிர சோதனை நடத்தினர். இருப்பினும் வேறு குணடு எதுவும் சிக்கவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+