For Daily Alerts
Just In
சபரிமலையில் பஸ் விழுந்து விபத்து-11 பக்தர்கள் பலி
சபரிமலை: ஆந்திராவைச் சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்குச் சென்றபோது பஸ், மலைப் பள்ளத்தில் விழுந்ததில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டம் தொரட்டூரைச் சேர்ந்த 61 அய்யப்ப பக்தர்கள் பேருந்தில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குச் சென்றனர்.
அங்கு தரிசனத்தை முடித்து விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். இன்று அதிகாலையில், எரிமேலி அருகே பாந்தா என்ற இடத்தில் கொண்டை ஊசி வளைவில் பஸ் திரும்பும் போது திடீரென பஸ் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
பின்னர் சாலையிலிருந்து 60 அடி பள்ளத்தில் விழுந்தது. இதில் பஸ்சுக்குள் இடிபாடுகளில் சிக்கி 11 பக்தர்கள் பரிதாபமாக உயிரழந்தனர். இறந்தவர்களில் 10 பேர் பெண்கள் என்பது சோகமானது.
காயமடைந்த மற்ற அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு கோட்டயம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
Comments
Story first published: Tuesday, February 17, 2009, 12:17 [IST]