மேடாஸ் நிறுவனங்களை அரசு ஏற்க ராஜு மகன்கள் எதிர்ப்பு!

Subscribe to Oneindia Tamil

Maytas
டெல்லி: சத்யம் ராமலிங்க ராஜுவின் மகன்கள் நடத்தும் மேடாஸ் இன்ப்ரா மற்றும் மேடாஸ் ப்ராபர்ட்டீஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களின் நிர்வாகத்தையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது.

சத்யம் நிறுவனத்தில் நடந்துள்ளது போன்ற மோசடிகள் மேடாஸிலும் நடந்திருக்கும் என நம்புவதால் இந்த முடிவை அரசு மேற்கொண்டுள்ளதாக கம்பெனி விவகாரங்கள் துறை அமைச்சர் பிசி குப்தா தெரிவித்துள்ளார்.

இதன் எதிரொலியாக மேடாஸ் இன்ஃபரா, மேடாஸ் பிராபர்ட்டிஸ் என்ற அந்த இரண்டு நிறுவனங்களின் இயக்குநர் வாரியத்தைக் கலைக்க மத்திய சட்ட வாரியத்திற்கு கம்பெனி விவகாரத்துறை செவ்வாய்க்கிழமை மாலை பரிந்துரை செய்தது.

இதையடுத்து சத்யம் நிறுவனத்தை போலவே ராஜுவின் மகன்களுடைய மேடாஸ் நிறுவனங்களும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வரும் சூழல் உருவாகியுள்ளது.

ஆனால் அரசின் இந்த முடிவை கடுமையாக எதிர்த்து வருகின்றனர் ராஜுவின் மகன்கள் தேஜா ராஜு மற்றும் ராமராஜு. தங்கள் எதிர்ப்பு மனுவை மத்திய கம்பெனிகள் சட்ட வாரியத்திடம் தாக்கல் செய்துள்ளனர்.

வெறும் சந்தகங்கள் மற்றும் யூகங்களின் அடிப்படையில் மேடாஸை அரசு கையகப்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்றும், கணக்கு வழக்குகளை வேண்டுமானால் சரி பார்த்துக் கொள்ளட்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+