For Daily Alerts
Just In
முத்துக்குமாரின் அஸ்தி 23ம் தேதி ராமேஸ்வரத்தில் கரைப்பு
சென்னை: இலங்கைத் தமிழர்களைக் காக்கக் கோரி சென்னையில் தீக்குளித்து இறந்த இளைஞர் முத்துக்குமாரின் அஸ்தி வருகிற 23ம் தேதி ராமேஸ்வரம் கடலில் கரைக்கப்படுகிறது.
இதுகுறித்து இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
முத்துகுமார் அஸ்தி 21-ந் தேதி சென்னையில் இருந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், புதுக்கோட்டைக்கு எடுத்து செல்லப்படுகிறது.
அதன் பின்னர், 22-ந் தேதி காலை புதுக்கோட்டையில் இருந்து திருப்பத்தூர், காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், வழியாக ராமேசுவரம் எடுத்து செல்லப்படுகிறது.
கடைசியாக, 23-ந் தேதி காலை 8 மணிக்கு ராமேசுவரம் கடலில் முத்துகுமாரின் அஸ்தி கரைக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு chennai சென்னை ராமேஸ்வரம் rameswaram முத்துக்குமார் muthukumar ashok kumar அஸ்தி immersion கரைப்பு
Story first published: Thursday, February 19, 2009, 9:26 [IST]