'தம்': இறந்தவர் குடும்பத்துக்கு ரூ. 40 கோடி இழப்பீடு
மியாமி: அமெரிக்காவில் புகைப்பிடிக்கும் பழக்கத்தால் நுரையீரல் புற்றுநோய்க்கு பலியானவரின் மரணத்தில் சிகரெட் கம்பெனிக்கு பங்கு இருப்பதாக கூறி அமெரிக்க நீதிமன்றம் ரூ. 40 கோடி நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள கூப்பர் சிட்டி என்ற நகரில் வசித்தவர் ஸ்டூவர்ட் ஹெஸ். இவர் கடந்த 1997ம் ஆண்டு தனது 55வது வயதில் மரணமடைந்தார்.
தனது 15வது வயதில் புகைபிடிக்கும் பழக்கத்தை ஆரம்பித்த இவர் சாகும் வரை அதாவது சுமார் 40 ஆண்டுகள் தொடர்ந்து புகைபிடித்து வந்துள்ளார். அவர் தினமும் குறைந்தபட்சம் இரண்டு பாக்கெட் சிகரெட்டாவது ஊதி தள்ளிவிடுவாராம்.
இவரது மரணத்தை தொடர்ந்து அவரது மனைவி எலைன் மற்றும் டேவிட் பென்சன் அன்ட் ஹெட்ஜஸ் என்ற புகை நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தனது தீர்ப்பில், ஹெஸ்ஸி்ன் சாவில் அந்நிறுவனத்துக்கு ஒரு பங்கு உள்ளது. இதனால் அவரது குடும்பத்துக்கு தண்டனை தொகையாக 24 கோடி, இழப்பு தொகையாக ரூ. 16 கோடி என மொத்தம் 40 கோடி கொடுக்க உத்தரவிட்டது.
ஆனால், அந்நிறுவனத்தின் தலைவர் பிலிப் மோரிஸ் இதை எதிர்த்து அப்பீல் செய்யப் போவதாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications