For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிவராத்திரி- பரோலில் ஆசிரமத்திற்கு வந்த பிரேம்ஸ்!

By Sridhar L
Google Oneindia Tamil News

Premanandha
புதுக்கோட்டை: பரோலில் விடுதலை செய்யப்பட்ட பிரேமானந்தா புதுக்கோட்டையில் உள்ள தனது ஆசிரமத்திற்கு நேற்று வந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே பாத்திமா நகரில் ஆசிரமம், மற்றும் பள்ளிகளை நடத்தி வந்தார் பிரேமானந்தா.

கற்பழிப்பு மற்றும் கொலை வழக்குகளில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இவர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந் நிலையில் இவரது ஆசிரமத்தில் வரும் 23ம் தேதி சிவராத்திரி பூஜை நடைபெற்ற உள்ளது. இதில் கலந்து கொள்ள இவர் பரோலில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து இவர் தனது ஆசிரமத்துக்கு வந்தார். இவருக்கு 6 நாட்கள் மட்டுமே பரோலில் தங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் 27ம் தேதி இவர் கடலூர் சிறையில் அடைக்கபடுகிறார்.

பிரேமானந்தா மீது இவ்வளவு புகார்கள் நிரூபிக்கப்பட்டுவிட்ட நிலையிலும் இவரைத் தேடி வரும் வெளிநாட்டு பக்தைகளின் எணணிக்கை மட்டும் குறையே இல்லை. ஏராளமான பக்தைகள் இவரது ஆசிரமத்துக்கு வந்தவண்ணம் உள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X