அம்மா பிறந்த நாள்-மீண்டும் இணையும் அம்பானிகள்?

இந்தியாவின் தனிப் பெரும் வர்த்தக சாம்ராஜ்யமாகத் திகழ்ந்த நிறுவனம் ரிலையன்ஸ். இதன் நிறுவனர் திருபாய் அம்பானி மறைவுக்குப் பின் அவரது மகன்கள் முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானி இருவரும் தனித்தனியாகப் பிரிந்தனர்.
முன்னவர் ரிலையன்ஸ் என்ற பெயரில் தொடர்ந்து தொழில் நிறுவனங்களை நடத்த, இளையவர் அனில் திருபாய் அம்பானி குழுமம் என்ற புதிய பெயரில் தனது நிறுவனங்களை நடத்தினார்.
இருவருமே இந்த நான்கு ஆண்டுகளில் பல்வேறு சாதனைகளைப் படைத்தனர். சர்வதேசப் பொருளாதார நெருக்கடிகளுக்கிடையிலும் உலகின் முதல் நிலைத் தொழில் அதிபர்களாகத் தொடர்கிறார்கள்.
பாகப் பிரிவினைக்குப் பிறகு இந்த இருவரும் வெகு அரிதாகவே சந்தித்துக் கொண்டார்கள். ஆனால் சண்டை தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் ஒருவர் மீது ஒருவர் வழக்குப் போடும் அளவுக்கு நிலைமை போனது.
ஆனால் நீரடித்து நீர் விலகாது என்ற பழமொழியை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர் அம்பானி சகோதரர்கள்.
இன்று அவர்களின் தாய் கோகிலாபென் அம்பானியின் 75-வது பிறந்த நாள் விழா. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு விசேஷமாக இந்த பிறந்த தினத்தை சர்வதேச வர்த்தக சமூகம் உற்றுப் பார்க்கிறது. காரணம், கோகிலாபென் முன்னிலையில் இரு சகோதரர்களும் ஒன்றிணையப் போவதாக எழுந்துள்ள செய்திதான்.
இன்று மாலை நடக்கும் பிறந்த நாள் விழாவில் முகோஷும் அனிலும் தங்கள் வேறுபாடுகளை மறந்து ஒன்றாக இணைந்துவிட்டதாக அறிவிக்க வேணடும் என்பது அம்மா கோகிலாபென்னின் விருப்பமாம். தாயின் விருப்பத்தை இருவருமே பூர்த்தி செய்வதாக வாக்களித்துள்ளனராம்.
அதற்கேற்ற உடன்பாடு ஒன்றையும் கோகிலாபென் தயாரித்து வைத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
5 ஆண்டுகளுக்கு முன் சகோதரர்களுக்கும் பெரும் சண்டை வந்தபோது, அதை சுமூகமாகத் தீர்த்து வைத்து, சொத்துப் பிரித்துக் கொடுத்தவரும் கோகிலாபென்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அம்பானி சகோதரர்கள் மீண்டும் இணைந்தால், அவர்களது ஒருங்கிணைந்த வர்த்தக நிறுவனம்தான் உலகின் முதல்நிலை அந்தஸ்தைப் பிடிக்கும். இணைவார்களா!!
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications