அம்மா பிறந்த நாள்-மீண்டும் இணையும் அம்பானிகள்?

இந்தியாவின் தனிப் பெரும் வர்த்தக சாம்ராஜ்யமாகத் திகழ்ந்த நிறுவனம் ரிலையன்ஸ். இதன் நிறுவனர் திருபாய் அம்பானி மறைவுக்குப் பின் அவரது மகன்கள் முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானி இருவரும் தனித்தனியாகப் பிரிந்தனர்.
முன்னவர் ரிலையன்ஸ் என்ற பெயரில் தொடர்ந்து தொழில் நிறுவனங்களை நடத்த, இளையவர் அனில் திருபாய் அம்பானி குழுமம் என்ற புதிய பெயரில் தனது நிறுவனங்களை நடத்தினார்.
இருவருமே இந்த நான்கு ஆண்டுகளில் பல்வேறு சாதனைகளைப் படைத்தனர். சர்வதேசப் பொருளாதார நெருக்கடிகளுக்கிடையிலும் உலகின் முதல் நிலைத் தொழில் அதிபர்களாகத் தொடர்கிறார்கள்.
பாகப் பிரிவினைக்குப் பிறகு இந்த இருவரும் வெகு அரிதாகவே சந்தித்துக் கொண்டார்கள். ஆனால் சண்டை தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் ஒருவர் மீது ஒருவர் வழக்குப் போடும் அளவுக்கு நிலைமை போனது.
ஆனால் நீரடித்து நீர் விலகாது என்ற பழமொழியை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர் அம்பானி சகோதரர்கள்.
இன்று அவர்களின் தாய் கோகிலாபென் அம்பானியின் 75-வது பிறந்த நாள் விழா. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு விசேஷமாக இந்த பிறந்த தினத்தை சர்வதேச வர்த்தக சமூகம் உற்றுப் பார்க்கிறது. காரணம், கோகிலாபென் முன்னிலையில் இரு சகோதரர்களும் ஒன்றிணையப் போவதாக எழுந்துள்ள செய்திதான்.
இன்று மாலை நடக்கும் பிறந்த நாள் விழாவில் முகோஷும் அனிலும் தங்கள் வேறுபாடுகளை மறந்து ஒன்றாக இணைந்துவிட்டதாக அறிவிக்க வேணடும் என்பது அம்மா கோகிலாபென்னின் விருப்பமாம். தாயின் விருப்பத்தை இருவருமே பூர்த்தி செய்வதாக வாக்களித்துள்ளனராம்.
அதற்கேற்ற உடன்பாடு ஒன்றையும் கோகிலாபென் தயாரித்து வைத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
5 ஆண்டுகளுக்கு முன் சகோதரர்களுக்கும் பெரும் சண்டை வந்தபோது, அதை சுமூகமாகத் தீர்த்து வைத்து, சொத்துப் பிரித்துக் கொடுத்தவரும் கோகிலாபென்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அம்பானி சகோதரர்கள் மீண்டும் இணைந்தால், அவர்களது ஒருங்கிணைந்த வர்த்தக நிறுவனம்தான் உலகின் முதல்நிலை அந்தஸ்தைப் பிடிக்கும். இணைவார்களா!!
-
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி












Click it and Unblock the Notifications