புலிகள் தாக்குதலில் புதுக்குடியிருப்பில் 1000 ராணுவ வீரர்கள் பலி

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு நகரம் விடுதலை புலிகளின் கைவசம் உள்ளது. இதை கைப்பற்ற இலங்கை ராணுவத்தினர் குண்டு மழை பொழிந்து வருகின்றனர். இருந்தாலும் புலிகள் அவர்களை எதிர்த்து கடுமையாக போரிட்டு வருகின்றனர்.
இலங்கை ராணுவத்தின் 53வது, 58வது, 59வது படைப் பிரிவுகளும் மற்றும் இரண்டு சிறப்பு படைப்பிரிவு என மொத்தம் ஐந்து பிரிவுகள் இந்நகரில் ஐந்து முனைகளில் இருந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
புதுக்குடியிருப்பு நகரைப் பிடித்து விட்டதாக ராணுவம் கூறியுள்ளபோதிலும் இது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
இந்த நிலையில், கடந்த மூன்று நாட்களாக அங்கு விடுதலை புலிகள் அதிரடி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சுமார் 1000 ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 3 ஆயிரத்துக்கும் அதிகமான ராணுவத்தினர் படுகாயம் அடைந்துவிட்டதாகவும் விடுதலை புலிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று 21 தமிழர்கள் படுகொலை
இந்த நிலையில் நேற்று நடந்த ராணுவத் தாக்குதலில் 21 அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
.
மாத்தளன் மருத்துவமனைக்கு அருகில் உள்ள மக்கள் குடியிருப்புக்கள் மீது நேற்று காலை 5 மணியளவில் சிறிலங்கா படையினர் பீரங்கி தாக்குதலை நடத்தினர்.
இதில் 5 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 21 பேர் காயமடைந்துள்ளனர்.
இத்தாக்குதலின் போது மருத்துவமனையின் சுவர் மற்றும் கூரை ஆகியவை சேதமடைந்தன. சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டிருந்தவர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
புதுக்குடியிருப்பு பகுதியில் சிறிலங்கா படையினர் நடத்திய பீரங்கி தாக்குதலில் 12 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 32 பேர் காயமடைந்துள்ளனர்.
புதுக்குடியிருப்பில் இடம்பெயர்ந்த மக்கள் வாழ்விடங்கள் மீது நேற்று பிற்பகல் சிறிலங்கா வான் படையின் மிக்-27 ரக வானூர்திகள் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன.
இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 வயதுச் சிறுவன் உட்பட 5 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications