பாக்-தேர்தலில் போட்டியிட ஷெரீப் சகோதர்களுக்கு தடை!

கடந்த 1999ல் அப்போதைய அதிபர் முஷராப்பை விமானத்துடன் நாடு கடத்த முயற்சி செய்ததாக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது. அவர் நாடு கடத்தப்பட்டார்.
பின்னர் ஒரு வழியாக நாடு திரும்பினார். ஆனால், தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட தடை நீக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த ஆண்டு நடந்த பாகிஸ்தான் பொது தேர்தலில் பெரும்பான்மையான ஓட்டுக்களை அவரது கட்சி பெற்றது.
இத்தேர்தலில் மொத்தமுள்ள 270 தொகுதிகளில் படுகொலை செய்யப்பட்ட பெனசிர் புட்டோவின் கணவர் ஆசிப் அலி சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு 97 இடங்களும், ஷெரீப் கட்சிக்கு 71 இடங்களும் கிடைத்தன.
இவர்கள் இருவரும் இணைந்து அதிபர் முஷராப்பை பதவியிலிருந்து தூக்கினர். ஷெரீப்பின் ஆதரவுடன் சர்தாரி அதிபராக நியமிக்கப்பட்டார். இதை தொடர்ந்து தற்போதைய ஜனநாயக அரசு தன்னை மீண்டும் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கும் என நவாஸ் ஷெரீப் கனவு கண்டு வந்தார்.
ஆனால், இவரது கனவுக்கு பெரும் அடியாக வந்தது பாகிஸ்தான் உச்சி நீதிமன்றத்தின் புதிய தீர்ப்பு ஒன்று. அதில், நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது சகோதரரும், பஞ்சாப் மாநில முதல்வருமான ஷாபஸ் ஷெரீப்புக்கும் தேர்தலில் போட்டியிட தடை விதித்துள்ளது. இதையடுத்து அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஷெரீப்பின் வக்கீல் அக்ரம் ஷேக் கூறுகையில், உச்ச நீதிமன்றத்தில் தேர்தலில் போட்டியிட வேண்டும் என ஷெரீப் தாக்கல் செய்த மனு முன்பு தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது அதே நிலைமை அவரது தம்பிக்கும் ஏற்பட்டுள்ளது. அதிபர் சர்தாரியின் உத்தரவுபடி தான் இந்த சதி திட்டம் அரங்கேறியுள்ளது என்றார்.
இதையடுத்து சர்தாரி மற்றும் ஷெரீப் இடையே இருந்து வந்த மோதல் வெளியுலகுக்குத் தெரிய வந்துள்ளது. இவ்விரு கட்சிக்கும் இடையே பிளவு அதிகமானதை அடுத்து பாகிஸ்தான் அரசியலில் மீண்டும் நிலையற்றதன்மை உருவாகியுள்ளது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications