For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எஸ்எஸ்எல்சி-மெட்ரிக்: 'தத்கலில்' விண்ணப்பிக்கலாம்

By Sridhar L
Google Oneindia Tamil News

சென்னை: பத்தாம் வகுப்பு, மெட்ரிகுலேஷன் மற்றும் ஆங்கிலோ இந்திய தேர்வுகளுக்கு இதுவரை விண்ணப்பம் செய்யாத தனித் தேர்வர்கள் தத்கல் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்குகின்றன.

இந்த தேர்வுகளுக்கு ஏற்கனவே விண்ணப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்காத தனித் தேர்வர்கள் தற்போது தக்கல் திட்டம் என்ற உடனடி அனுமதி திட்டத்தின்கீழ் மார்ச் 5ம் தேதி முதல் 12ம் தேதி வரை, விடுமுறை நாட்கள் நீங்கலாக, விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்ப படிவங்களை சென்னையில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குனர் அலுவலகம் மற்றும் மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, கடலூர், வேலூர் ஆகிய இடங்களில் உள்ள தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பத்தை மார்ச் மாதம் 12ம் தேதிக்குள் அரசு தேர்வுகள் இயக்குனர் அலுவலகத்தில் நேரில் ஒப்படைக்க வேண்டும்.

இருப்பினும் தக்கல் திட்டத்தில் விண்ணப்பிப்பவர்கள் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, வேலூர், கடலூர் ஆகிய இடங்களில் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X