நார்வே: இந்திய தூதரகம் முன் தமிழர்கள் போராட்டம்
நார்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் ஏற்பாடு செய்த இக் கவனஈர்ப்பு போராட்டம் வியாழக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை நடைபெற்றது.
தமிழர்கள் மீது இலங்கை கட்டவிழ்த்து விட்டுள்ள இன அழிப்புப் போரை நிறுத்துவதற்குரிய கடமை இந்தியாவிற்கு உள்ளது போராட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டது.
போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள், இந்தியாவை வலியுறுத்தும் கோரிக்கைகளை வெளிப்படுத்தும் பதாகைகளைத் தாங்கி நின்றனர்.
- போர் நிறுத்தத்தின் அவசியம் தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் வேண்டுகோளுக்கு ஏற்ப நிபந்தனையற்ற உடனடிப் போர் நிறுத்தத்தினை ஏற்படுத்துவதற்கு இந்தியா உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்
- தமிழர்கள் மீதான சிங்களப் பேரினவாதத்தின் இன அழிப்பினை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும்
- ஐக்கிய நாடுகள் சபையின் உதவி நிறுவனங்கள், அனைத்துலக உதவி நிறுவனங்கள், அனைத்துலக கண்காணிப்பாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை வன்னிக்குள் செல்ல அனுமதித்தல் வேண்டும்.
- தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமையை இந்தியா அங்கீகரிக்க வேண்டும்
- தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை இந்தியா விலக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டது.
போராட்டத்தின் இறுதியாக நார்வே நாட்டுக்கான இந்தியத் தூதர் பான்பிட் ராயிடம் பிரதமர் மன்மோகன் சிங்குக்கான கோரிக்கை மனுவை கோரிக்கை மனுவை தமிழர் பிரதிநிதிகள் அளித்தனர்.













Click it and Unblock the Notifications