நார்வே: இந்திய தூதரகம் முன் தமிழர்கள் போராட்டம்
ஓஸ்லோ: நார்வேயில் உள்ள இந்திய தூதரகம் முன்பு நூற்றுக்கணக்கான தமிழர்கள் கூடி, இலங்கை இன அழிப்புக்கு இந்தியா துணை போகக் கூடாது என்று கூறி நேற்று போராட்டம் நடத்தினர்.நார்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் ஏற்பாடு செய்த இக் கவனஈர்ப்பு போராட்டம் வியாழக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை நடைபெற்றது.
தமிழர்கள் மீது இலங்கை கட்டவிழ்த்து விட்டுள்ள இன அழிப்புப் போரை நிறுத்துவதற்குரிய கடமை இந்தியாவிற்கு உள்ளது போராட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டது.
போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள், இந்தியாவை வலியுறுத்தும் கோரிக்கைகளை வெளிப்படுத்தும் பதாகைகளைத் தாங்கி நின்றனர்.
- போர் நிறுத்தத்தின் அவசியம் தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் வேண்டுகோளுக்கு ஏற்ப நிபந்தனையற்ற உடனடிப் போர் நிறுத்தத்தினை ஏற்படுத்துவதற்கு இந்தியா உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்
- தமிழர்கள் மீதான சிங்களப் பேரினவாதத்தின் இன அழிப்பினை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும்
- ஐக்கிய நாடுகள் சபையின் உதவி நிறுவனங்கள், அனைத்துலக உதவி நிறுவனங்கள், அனைத்துலக கண்காணிப்பாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை வன்னிக்குள் செல்ல அனுமதித்தல் வேண்டும்.
- தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமையை இந்தியா அங்கீகரிக்க வேண்டும்
- தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை இந்தியா விலக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டது.
போராட்டத்தின் இறுதியாக நார்வே நாட்டுக்கான இந்தியத் தூதர் பான்பிட் ராயிடம் பிரதமர் மன்மோகன் சிங்குக்கான கோரிக்கை மனுவை கோரிக்கை மனுவை தமிழர் பிரதிநிதிகள் அளித்தனர்.