யு.கே நாடாளுமன்றம் முன் ஈழத் தமிழர் தீக்குளிப்பு

இலங்கை ராணுவம் நடத்தி வரும் இனப்படுகொலையை கண்டித்து உலகம் முழுவதும் தமிழர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் பல்வேறு நாடுகளிலும் அயராமல் போராடி வருகின்றனர்.
அதேசமயம், பல தமிழர்கள் தீக்குளிப்பு போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 14ம் தேதி லண்டனில் உள்ள இங்கிலாந்து பிரதமர் வீட்டின் முன்பு சுமார் 5 ஆயிரம் தமிழர்கள் இலங்கையில் இருக்கும் அப்பாவி தமிழர்களை காக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 26 வயதான இலங்கை தமிழர் ஒருவர் தீக்குளிக்க முயன்றார்.
ஆனால் சரியான சமயத்தில் போலீசார் அவரது முயற்சியை தடுத்து நிறுத்தினர்.
இந்நிலையில் 27ம் தேதி மாலை சுமார் 4 மணி அளவில் மத்திய லண்டனில் உள்ள நாடாளுமன்ற சதுக்கம் முன்பு இலங்கை தமிழர் ஒருவர் தலையில் பெட்ரோலை ஊற்றி கொண்டு தீக்குளித்தார்.
அங்கிருந்த போலீசார் தீயை உடனடியாக அணைத்து அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு வயது 43. அவர் குறித்த பிற விவரங்கள் தெரியவில்லை.
இது குறித்து லண்டன் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், அவர் படுகாயம் அடைந்திருந்தாலும், அவரது நிலைமை கவலைக்கிடமான கட்டத்தை தாண்டிவிட்டது என்றார்.












Click it and Unblock the Notifications