சென்னை-90 போலீஸ் அதிகாரிகள் மாற்றம்
சென்னை: தொடர்ந்து பல ஆண்டுகளாக சென்னையில் வேலை பார்த்த 59 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 15 உதவி கமிஷ்னர்கள் உட்பட 90 பேர் மற்ற தமிழக நகரங்களுக்கு மாற்றப்ப்டடுள்ளனர்.
மக்களவைத் தேர்தல் வரும் நிலையில் மூன்றாண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் வேலை பார்க்கும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டிய நிலைக்கு அரசு தள்ளப்பட்டுள்லது.
இதையடுத்து இந்த இடமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் பணியாற்றி வந்த 15 உதவி கமிஷனர்கள் மற்றும் 75 இன்ஸ்பெக்டர்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கிண்டி உதவி கமிஷ்னர் நடராஜன் திருவொற்றியூருக்கும், திருவொற்றியூர் உதவி கமிஷ்னர் முரளி மகாகவி பாரதி நகருக்கும், மகாகவி பாரதி நகர் உதவி கமிஷ்னர் கண்ணப்பன் சென்னை மத்திய குற்றப் பிரிவுக்கும், தஞ்சாவூர் டிஎஸ்பி ரொசாரியோ நுங்கம்பாக்கம் உதவி கமிஷ்னராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
துரைப்பாக்கம் உதவி கமிஷ்னர் ராதாகிருஷ்ணன் பூக்கடைக்கும், பூக்கடை உதவி கமிஷ்னர் பாலசந்திரன் போலீஸ் தொழில்நுட்பப் பிரிவிற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
இவர்களை தவிர மேலும் சில உதவி கமிஷ்னர்கள் உள்பட மொத்தம் 15 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல மூன்று ஆண்டுகளுக்கு மேல் சென்னையில் பணிபுரிந்து வந்த 59 போலீஸ் இன்ஸ்பெக்டர்களும், சொந்த ஊரான சென்னையில் வேலை பார்த்து வந்த 16 இன்ஸ்பெக்டர்கள் உள்பட மொத்தம் 75 இன்ஸ்பெக்டர்கள் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டம் உள்ளிட்ட இடங்களுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதை தொடர்ந்து மற்ற நகரங்களிலும் ஒரே இடத்தில் பணிபுரியும் போலீஸ் அதிகாரிகள் விரைவில் மாற்றப்பட உள்ளதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications