For Daily Alerts
Just In
நாட்டின் பணவீக்கம் மேலும் குறைந்தது
டெல்லி: நாட்டின் பணவீக்கம் மேலும் குறைந்துள்ளது.
பிப்ரவரி 21-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்கத்தின் அளவு 3.36லிருந்து 3.03 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.
உணவுப் பொருட்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் தேயிலையின் விலை கணிசமாகக் குறைந்து காணப்பட்டதால் பணவீக்கம் குறைந்துவிட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கவனிக்க: இங்கே விலை எனக் குறிப்பிடப்படுவது பொருட்களின் சந்தை விலையை அல்ல. மொத்த விற்பனை விலையைக் குறிக்கும்.
கடந்த ஆண்டு இதே நாளில் பணவீக்கத்தின் அளவு 5.69 சதவிகிதமாக இருந்தது.
இந்த இரண்டு ஆண்டுகளில் பணவீக்கம் இந்த அளவு குறைந்திருப்பது இதுவே முதல்முறை. ரிசர்வ் வங்கி ரெபோ ரேட் மற்றும் ரிவர்ஸ் ரேட்டை 50 புள்ளிகள் அடிப்படையில் குறைத்த அடுத்த நாளே இந்த பணவீக்க வீழ்ச்சி அறிவிப்பு வந்துள்ளது.
Comments
Story first published: Thursday, March 5, 2009, 16:44 [IST]