உ.பியில் தனியாக போட்டியிட காங். முடிவு - 24 வேட்பாளர்கள் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

Sonia Gandhi
டெல்லி: உத்தரப் பிரதேச மாநிலத்தில் 24 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் நேற்று அறிவித்தது. சமாஜ்வாடி கட்சி தொடர்ந்து கூடுதல் இடங்களைக் கேட்டு வருவதால், தனித்துப் போட்டியிடும் முடிவுக்கு காங்கிரஸ் வந்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் 80 லோக்சபா தொகுதிகள் உள்ளன. தற்போது பகுஜன் சமாஜ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. அந்த கட்சியின் தலைவர் மாயாவதி முதல்வராக உள்ளார்.

மாயாவதியின் செல்வாக்கை சமாளித்து அதிக தொகுதிகளை வெல்ல, சேர்ந்து போட்டியிடலாம் என காங்கிரஸும், சமாஜ்வாடிக் கட்சியும் முடிவு செய்தன.

ஆனால், சமாஜ்வாடி கட்சி கூடுதல் சீட்களை கேட்டு வருகிறது. அதை விட முக்கியமாக பல தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அது தன்னிச்சையாக அறிவித்து விட்டது.

காங்கிரஸ் கட்சி 25 தொகுதிகளைத்தான் சமாஜ்வாடியிடம் கேட்டது. ஆனால் அவ்வளவு தர முடியாது என்று கூறிய முலாயம் சிங், 62 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.

இதனால் உ.பி. காங்கிரஸார் கடுப்பாகி விட்டனர். இனியும் முலாயமிடம் கெஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. தனித்தே போட்டியிடுவோம் என கட்சி மேலிடத்திற்குத் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேற்று காங்கிரஸ் கட்சி 24 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்தது. இதன் மூலம் தனித்துப் போட்டியிட காங்கிரஸ் முடிவு செய்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்த 24 பேர் பட்டியலில் சோனியா காந்தி (ரேபரேலி), ராகுல் காந்தி (அமேதி), ராஜ்பாபர் (பதேபூர்), சல்மான் குரேஷி (பரூக்காபாத்) ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

இருப்பினும் இன்னும் கூட்டணிப் பேச்சுவார்த்தையை காங்கிரசும் முலாயமின் சமாஜ்வாடி கட்சியும் முறி்த்துக் கொள்ளவி்ல்லை. இந்தக் கூட்டணியைக் காக்க தீவிர முயற்சிகள் நடக்கின்றன.

கூட்டணி உறுதியானால் இரு தரப்பும் அறிவித்த வேட்பாளர் பட்டியலில் மாற்றங்கள் வரலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+