மருத்துவமனையில் பயங்கர தாக்குதல் - 37 தமிழர்கள் படுகொலை
வன்னி: வன்னியில் உள்ள மாத்தளன் மருத்துவமனை மீது இலங்கைப் படைகள் நடத்திய வெறித் தாக்குதலில் 37 தமிழர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 78 பேர் காயமடைந்தனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாத்தளன் மருத்துவமனை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகள், முள்ளிவாயக்கால், அம்பலவன்பொக்கணை, புதுக்குடியிருப்பு மற்றும் இரணைப்பாலைப் பகுதிகளில் நேற்று புதன்கிழமை முற்பகல் இலங்கைப் படைகள், ஆர்ட்டில்லரி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இதில் 37 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 78 பேர் காயமடைந்துள்ளனர்.
பாதுகாப்பு வலய பகுதி என இலங்கை அரசு அறிவித்த மாத்தளன் பகுதியில் படையினர் தொடர்ச்சியாக எறிகணைத் தாக்குதலை நடத்தி தமிழர்களை படுகொலை செய்து வருகின்றனர்.
இதேபோல, அம்பலவன்பொக்கணை, முள்ளிவாய்க்கால், வலைஞர்மடம் மற்றும் புதுக்குடியிருப்பு மக்கள் குடியிருப்புக்கள் மீதும் தொடர்ச்சியாக சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.