மத்தியில் காங்கிரஸ் கூட்டணி தோற்கும்: வைகோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: லோக்சபா தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பெரும் தோல்வியைத் தழுவும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
திண்டுக்கல் பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாகவும் கூறி பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணியை திண்டுக்கல் போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த நிலையில் மதுரை வந்த மதிமுக பொதுச் செயலர் வைகோ, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கொளத்தூர் மணியை சந்தித்தார்.
பின்பு சிறைக்கு வெளியே அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியை படு தோல்வி அடையச் செய்வோம்.
தமிழர்களுக்கு துரோகம் செய்யும் கட்சிகளுக்கு மக்கள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications