காங்கிரஸுடன் கூட்டணி உடைந்து விட்டது - அமர்சிங்
டெல்லி: காங்கிரஸுடனான உறவு முறிந்து விட்டது. இதற்கு மேல் இதைக் கடுமையான வார்த்தைகளால் கூற நான் விரும்பவில்லை என்று சமாஜ்வாடி கட்சி பொதுச் செயலாளர் அமர்சிங் கூறியுள்ளார். இதன் மூலம் இரு கட்சிகளும் உ.பி. லோக்சபா தேர்தலில் தனித் தனியாக போட்டியிடவுள்ளது உறுதியாகியுள்ளது.
மன்மோகன் அரசு கொண்டு வந்த நம்பிக்கைத் தீர்மானத்திற்கு ஆதரவு கொடுத்து அக்கட்சியுடன் நெருங்கி வந்தது சமாஜ்வாடிக் கட்சி. இதையடுத்து இரு கட்சிகளும் உ.பி. லோக்சபா தேர்தலிலும் கூட்டணி வைக்க முடிவு செய்தன.
ஆனால் சமாஜ்வாடி கட்சி திடீரென அதிக சீட்களைக் கேட்டு காங்கிரஸை நெருக்கடியில் ஆழ்த்தியது. அது மட்டுமல்லாது, 60க்கும் மேற்பட்ட தொகுதிகளுக்கு வேட்பாளர்களையும் அறிவித்து காங்கிரஸை கடுப்பாக்கியது.
இருப்பினும் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து சமாஜ்வாடியுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேசி வந்தது. இதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு 24 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்ததது. இதனால் சமாஜ்வாடி கட்சி அதிர்ச்சி அடைந்தது.
இந்தச் சூழ்நிலையில், காங்கிரஸுடனான கூட்டணி உடைந்து விட்டதாக அமர்சிங் கூறியுள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், எந்தவிதமான கடினமான வார்த்தைகளையும் பயன்படுத்த நான் விரும்பவில்லை. கூட்டணி உடைந்து விட்டது.
காங்கிரஸ் கட்சி 24 தொகுதிகளுக்கு எப்போது வேட்பாளர்களை அறிவித்ததோ அப்போதே கூட்டணிக்கான முடிவுரை எழுதப்பட்டு விட்டது.
மொத்தம் உள்ள 80 சீட்களில் காங்கிரஸ் கட்சிக்கு 17 வரை தர நாங்கள் முன்வந்தோம். ஆனால் காங்கிரஸ் கட்சியோ 25 சீட்களுக்கும் கூடுதலாக எதிர்பார்த்தது.
கூட்டணி என்ற பெயரில், எந்தவொரு தேசிய கட்சியோ அல்லது பிராந்திய கட்சியோ, கூட்டணிக் கட்சி கடந்த முறை வெற்றி பெற்ற தொகுதிகளை கேட்க முடியாது. ஆனால் சமாஜ்வாடி வெற்றி பெற்ற தொகுதிகளையெல்லாம் காங்கிரஸ் கேட்டது.
இருப்பினும் ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தியை எதிர்த்தும், அமேதி தொகுதியில், ராகுல் காந்தியை எதிர்த்தும் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர்களை நிறுத்தாது.
கூட்டணி இருக்கிறதோ, இல்லையோ, இவர்களை எதிர்த்து நாங்கள் வேட்பாளர்களைப் போட மாட்டோம்.
நாங்கள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு மூன்று உறுதிமொழிகளை அளித்தோம். அரசைக் காப்பாற்றுவோம், அணு ஆயுத ஒப்பந்தம் நிறைவேற உறுதுணையாக இருப்போம் மற்றும் உ.பி. லோக்சபா தேர்தலில் இணைந்து போட்டியிடுவோம் என்பதே அது. அதில் 3வது உறுதிமொழியை நிறைவேற்ற முடியாத நிலை. எங்களது விதியை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.
ஆள் பார்த்து ஆதரவு...
எங்களது முக்கிய எதிரி பகுஜன் சமாஜ் கட்சிதான். எந்தத் தொகுதியிலாவது எங்களது வேட்பாளர் பலவீனமாகவும், காங்கிரஸ் வேட்பாளர் பலமானவராகவும் இருந்தால், நாங்கள் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிப்போம்.
நாங்கள் வென்ற தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களை நிறுத்தினால் அதேபோல நாங்களும் அவர்கள் வென்ற தொகுதிகளில் வேட்பாளர்களைப் போடுவோம். அலிகார், வாரணாசி போன்ற காங்கிரஸ் வென்ற தொகுதிகளில் எங்களது வேட்பாளர்களைப் போடுவோம்.
இந்த நிலைமைக்கு நாங்கள் காரணம் அல்ல. இன்னும் நாங்கள் சோனியா காந்தியை மதிக்கிறோம் என்றார் அமர்சிங்.
கூட்டணி உடைந்து விட்டது என்றாலும் கூட, அமர்சிங்கின் பேட்டியைப் பார்க்கும்போது காங்கிரஸ் கட்சியுடன் சமாஜ்வாடி கட்சி மறைமுகமான உறவை தொடருவதாகவே தோன்றுகிறது. இருவருக்கும் பொது எதிரி மாயாவதி என்பதால், அவரது பகுஜன் சமாஜ் கட்சி வெற்றி பெறுவதைத் தடுக்க ரகசியமான முறையில் பரஸ்பரம் ஒத்துழைப்பு நல்குவார்கள் எனவும் தெரிகிறது.
-
ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. ஒவ்வொரு நாளும் மரண அடி -
இஸ்ரேலால் இந்திய அடுப்புகளுக்கு ஆப்பு? கேஸ் சிலிண்டர் விலை உயர்வு வெறும் டிரைலர் தானா? என்னாகும்? -
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
இன்றைய டாப் 10 பேச்சுக்கள் 09/03/2026: ஸ்டாலின் முதல் சீமான் வரை கூறிய நச் கருத்துகள் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க












Click it and Unblock the Notifications