தென் சென்னையை நெப்போலியனுக்குக் கேட்டு மனு
சென்னை: நடிகர் நெப்போலியனுக்கு தென் சென்னை தொகுதியைக் கேட்டு திமுகவில் மனு வாங்கப்பட்டுள்ளது.
திமுக சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்பங்கள் படு சூடாக விற்பனையாகி வருகிறது.
இதுவரை 200 பேர் வரை மனுக்களை வாங்கியுள்ளனர். நேற்றும் அண்ணா அறிவாலயத்தில் விண்ணப்பங்களை வாங்க கூட்டம் அலை மோதியது.
தென் சென்னையில் நெப்போலியனுக்கு சீட் கேட்டு அவருக்காக அவரது ரசிகர் மன்றத்தினர் மனு வாங்கிச் சென்றனர்.
ஏற்கனவே கட்சி மேலிடம் உத்தரவிட்டால் தென் சென்னையில் போட்டியிட தயாராக இருப்பதாக நெப்போலியன் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல மத்திய அமைச்சர் ராதிகா செல்வியும் நேற்று திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கோரி விண்ணப்பம் வாங்கினார்.
வருகிற 15ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். அன்றே விண்ணப்பங்களை கொடுக்க கடைசி நாளாகும். இதையடுத்து 25ம் தேதி முதல்வர் கருணாநிதி, பொதுச் செயலாளர் அன்பழகன் முன்னிலையில் நேர்காணல் நடைபெறவுள்ளது.