நாடாளுமன்ற தேர்தல்; மார்ச் 15ல் மூவேந்தர் முன்னணி கழகம் கூட்டம்
மதுரை: மதுரையில் வரும் 15ம் தேதி அன்று அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. அப்போது நாடாளுமன்ற தேர்தல் குறித்த முக்கிய முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.
மூவேந்தர் முன்னணி கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் வரும் 15ம் தேதி, மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரில் உள்ளது சிட்கோ கலையரங்கத்தில் நடக்கிறது.
இக்கூட்டத்துக்கு கட்சி தலைவர் டாக்டர் சேதுராமன் தலைமை வகிக்கிறார். கூட்டத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி மற்றும் தேர்தல் பணி குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைய வேண்டும் என்றும், தென் மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியில் கட்சி தலைவர் டாக்டர் சேதுராமன் போட்டியிட வேண்டும் என்றும் முக்கிய நிர்வாகிகள் சிலர் விருப்பம் தெரிவித்துள்ளனர். கூட்டத்தில் இது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்படும் என அக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.