நாடாளுமன்ற தேர்தல்; அதிமுகவுக்கு அருந்ததியர் இயக்கங்கள் ஆதரவு
சென்னை: அருந்ததியர் மக்கள் இயக்கம் தங்களுக்கு 6 சதவீத இடஒதுக்கீடுக்கு பதிலாக 3 சதவீத இடஒதுக்கீடு மட்டுமே தந்த திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க போவதாக தெரிவித்துள்ளது.
சமீபத்தில் திமுக அரசு தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியினருக்கு மூன்று சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என சட்டசபையில் அறிவித்தது.
ஆனால், தங்களுக்கு 6 சதவீத இடஒதுக்கீடு வேண்டும் என்று கூறி 3 சதவீத இடஒதுக்கீடு மட்டுமே தந்த திமுகவுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. இதைதொடர்ந்து நேற்று பல அருந்ததியர் இயக்கங்கள் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சந்தித்தன.
தமிழக அருந்ததியர் சங்கம், புரட்சிப் புலிகள், ஆதித் தமிழர் விடுதலை முன்னணி, தமிழ்நாடு அருந்ததியர் ஜனநாயக முன்னணி, அருந்ததியர் மகாசபை உள்ளிட்ட இயக்கங்களின் முக்கிய தலைவர்கள் சேர்ந்தவர்கள் வந்திருந்தனர்.
அவர்கள் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப் போவதாக ஜெயலலிதாவிடம் தெரிவித்துள்ளனர்.
அருந்ததியினருக்கு நன்றி-ஜெ:
அப்போது ஜெயலலிதா அருந்ததியர் இயக்கங்களின் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலிப்பதாக உறுதி அளித்தார். நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தருவதற்கு தனது நன்றியினை அவர்களுக்கு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications