இலங்கை-மாசிமக விழாவை துறந்த கடலூர் கிராமங்கள்

Subscribe to Oneindia Tamil

கடலூர்: இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தரும் வகையில் மாசிமக விழா கொண்டாட்டத்தை கடலூர் அருகே உள்ள 20 கிராம மக்கள் புறக்கணித்தனர்.

மாசி மாதத்தில் மகம் நட்சத்திரமும், பெளர்ணமியும் சேர்ந்து வரும் நாளில் மாசிமகம் திருவிழா கொண்டாடப்படுகிறது.

குரு பகவான் சிம்ம ராசிக்கு சஞ்ரிக்கும் அன்றைய தினத்தில் பிறவி பாவங்களை களைய இந்துக்கள், கடலாடும் திருவிழாவை கொண்டாடுகின்றனர். கடலில் நீராட முடியாதவர்கள் அருகிலிருக்கும் கோவிலுக்கு சென்று சிவனை வணங்குவர்.

ஆண்டு தோறும் தமிழகத்தில் கடலூரில் இந்த விழா விமர்சிகையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு நேற்று கொண்டாடப்பட்டது. இதில் கடலூருக்கு அருகில் உள்ள கிராம கோயில்களில் இருந்கும் உற்சவ மூர்த்திகளை பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளில் தேவனாம்பட்டினத்தில் உள்ள கடற்கரைக்கு கடலாட கொண்டு வந்தனர்.

உற்சவ மூர்த்திகளுக்கு கடற்கரையில் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் நீராடி தீர்தோற்சவம் செய்து, சாமி தரிசனம் கண்டனர். பெளர்ணமி அன்று கடலில் அலைகளின் சீற்றம் அதிகம் இருக்கும் என்பதால் பக்தர்கள் ஆழமான பகுதிக்குச் சென்று நீராட வேண்டாம் என போலீசார் எச்சரித்தனர்.

ஒருபக்கம் கடலூரில் மாசிமக விழா சிறப்பாக நடந்தாலும் மறுபக்கம் ஆலப்பாக்கம், பெத்தாங்குப்பம் குறவன்மேடு, முல்லைநகர், அம்பேதகர் கரைமேடு, கீழ்பூவாணிக்குப்பம், மேல்பூவாணிக்குப்பம் உள்ளிட்ட 20 கிராம மக்கள் இலங்கையில் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த ஆண்டு மாசிமகம் விழாவினை கொண்டாட போவதில்லை என முடிவு செய்தனர். இதையடுத்து அந்த கிராமத்தில் இருந்த கோவில் சிலைகள் பூஜைக்கு கடற்கரைக்கு எடுத்து வரப்படவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+