திமுக தலைமைக் கழக பேச்சாளருக்கு கல்தா!
கரூர்: திமுக தலைமைக் கழக பேச்சாளர் கரூர் கணேசனை திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கி அக்கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் உத்தரவிட்டுள்ளார்.
திமுக தலைமைக் கழக பேச்சாளராக இருப்பவர் கரூர் கணேசன். இவரது மனைவி கவிதா. இவர் இனாம் கரூர் நகராட்சி தலைவராக உள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கரூர் கணேசன் மனைவி கவிதா பற்றி திமுக மாவட்ட துணைச் செயலாளர் பாலகுருபரன் இழிவாகப் பேசியதாக கணேசன் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில் கரூர் கணேசன் மற்றும் திமுகவைச் சேர்ந்த சிலர் பாலகுருபரனின் திருமண மண்டபத்திற்கு சென்று அங்கிருந்த மேலாளரை அடித்து உதைத்து அவரிடம் இருந்த ரூ. 3. லட்சம் பணம், நகைளை பறித்து சென்றதாக பாலகுருபரன் தரப்பில் கரூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.
அதன் பேரில் திமுக தலைமைக் கழக பேச்சாளர் கரூர் கணேசன், இனாம் கரூர் 13 -வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் கிரிவாசன், 3 -வது வார்டு பிரதிநிதி மதியழகன், புகளூர் பேரூராட்சியைச் சேர்ந்த சண்முகம், வெங்கமேடு புரட்சி நம்பி ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில் திமுக தலைமைக் கழக பேச்சாளர் கரூர் கணேசன் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து தற்காலிமாக நீ்க்கி கட்சி பொதுச் செயலாளர் அன்பழகன் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications