For Daily Alerts
Just In
அரசு ஊழியர் ஊதியம் கோரும் 'டாஸ்மாக்' ஊழியர்கள்
மதுரை: அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனக் குழுக் கூட்டம் மதுரையில் அதன் தலைவர் பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். இக் கோரிக்கையை அரசு ஏற்று உடனடியாக இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.
பணி நிரந்தரம், வாரவிடு முறை, சீரான இன்சென்டிவ், தேசிய பண்டிகை நாட்களில் விடுமுறை உள்ளிட்டவைகளை வழங்க வேண்டும்.
அனுமதியின்றி பார் நடத்தும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அதற்காக ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் போக்கை கைவிட வேண்டும் போன்ற பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாடு staffs ஊழியர்கள் அரசு ஊழியர்கள் ஊதியம் உயர்வு salary hike tassmac டாஸ்மாக் tamilnadu government employees
Story first published: Thursday, March 12, 2009, 11:05 [IST]