மக்களவை தொகுதி அறிமுகம்-18: திருப்பூர்

கோவை மற்றும் கோபிச்செட்டிப்பாளையத்திலிருந்து பிரித்து எடுக்கப்பட்ட தொகுதிகளை இணைத்து புதிய திருப்பூர் தொகுதி உருவாகியுள்ளது.
சமீபத்தில்தான் திருப்பூர் தனி மாவட்டமாகவும், மாநகராட்சியாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது தனி எம்.பி. தொகுதியாகவும் திருப்பூர் மாறியுள்ளது.
திருப்பூர் லோக்சபா தொகுதியில் இடம் பெற்றுள்ள சட்டசபைத் தொகுதிகள் - பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு.
இதுவரை ஒரே தொகுதியாக இருந்து வந்த திருப்பூர் சட்டசபைத் தொகுதி தற்போது இரண்டாகப் பிரித்து வடக்கு மற்றும் தெற்கு என இரண்டாகியுள்ளது.
தொழிலாளர்கள் நிறைந்த தொகுதி இது. சட்டசபைத் தொகுதிகளைப் பொறுத்தமட்டில், திருப்பூர் தற்போது சிபிஎம் வசம் உள்ளது. கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி அதிமுக வசம் உள்ளது. பவானி தொகுதியின் எம்.எல்.ஏ. பாமகவைச் சேர்ந்தவர்.
அந்தியூர் தொகுதியில் திமுகவும், பெருந்துறை அதிமுக வசமும் உள்ளது.












Click it and Unblock the Notifications