பிரார்த்தனையில் மாணவிக்கு முத்தம்-பாஸ்டர் கைது
பணகுடி: பிரார்த்தனை செய்ய சர்ச்சுக்கு வந்த பிளஸ்டூ மாணவிக்கு முத்தம் கொடுத்த பாஸ்டர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்டம் பணகுடி அருகேயுள்ள வடக்கன்குளத்தை சேர்ந்தவர் எஸ்.நியூட்டன். இவர் அப்பகுதியில் விக்டரி அசெம்பளி ஆப் காட் என்ற சபையை நடத்தி வருகிறார்.
இங்கு காலை, மாலை நேரங்களில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் ஜெபக்கூட்டங்கள் நடைபெறும். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆண்கள், பெண்களும் கலந்து கொள்வர்.
அடங்கார் குளத்தை சேர்ந்த கிருஸ்டி என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக சபை பிரார்த்தனை கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக சபைக்கு வரும் கிறிஸ்டியிடம் பாஸ்டர் நியூட்டன் இரட்டை அர்த்தங்களுடன் பேசியுள்ளார். மேலும் இரவு நேரங்களில் செல்போனில் மிக ஆபாசமாக பேசியும், ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியும் தொந்தரவு செய்துள்ளார்.
இதுபோல் கிறிஸ்டியுடன் வரும் அதே ஊரை சேர்ந்த பிளஸ் டூ மாணவி ஒருவரையும் சபை அலுவலகத்தில் யாரும் இல்லாத நேரத்தில் கட்டி பிடித்து முத்தம் கொடுத்து விட்டார்.
இதனால் மனமுடைந்த கிறிஸ்டி பணகுடி போலீசில் புகார் செய்தார். இதில் பாஸ்டர் நியூட்டன் எங்களிடம் தவறாக நடக்க முயன்றதுடன் சபைக்கு நாங்கள் செல்லாததால் அங்கு வருபர்களிடம் எங்களை பற்றி அவதூறு பரப்பி வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் செய்யது நிஷார் அகமது வழக்கு பதிவு செய்து பாஸ்டர் நியூட்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.












Click it and Unblock the Notifications