அமெரிக்க சமரச திட்டத்தை நிராகரித்த சர்தாரி!
இஸ்லாமாபாத்: பிரதமர் கிலானி, ராணுவ தளபதி கயானி மற்றும் அமெரிக்கா, இங்கிலாந்து ஆகியவை கொடுத்த நெருக்கடியைத் தொடர்ந்து இறங்கி வந்த பாகிஸ்தான் அதிபர் சர்தாரி தற்போது அவர்கள் அறிவித்த சமரச திட்டத்தை ஏற்க திடீரென மறுத்து விட்டார். இதனால் பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பு கூடியுள்ளது.
பாகிஸ்தான் அதிபராக பதவியேற்ற சர்தாரி திருப்திகரமான வகையில் நிர்வாகத்தை நடத்திச் செல்லவில்லை என்ற பெரும் குற்றச்சாட்டு பாகிஸ்தானில் உள்ளது.
தொடரும் தீவிரவாதத் தாக்குதல்களும் சேர்ந்து கொள்ளவே சர்தாரி கடும் விமர்சனத்திற்குள்ளானார்.
இந்த நிலையில் சிக்கலுக்கெல்லாம் உச்சகட்டமாக, சமீபத்தில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், அவரது தம்பி சபாஷ் ஷெரீப் ஆகியோர் தேர்தல்களில் போட்டியிட பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது.
இதனால் வெகுண்ட ஷெரீப் கட்சியினர் நாடு முழுவதும் பெரும் போராட்டத்தில் குதித்தனர். மேலும் பதவி நீக்கம் செய்யப்பட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இப்திகார் செளத்ரி, நீதிபதிகள் உள்ளிட்டோருக்கு மீண்டும் அதே பொறுப்பை வழங்க வேண்டும் என்று கோரி நேற்று முன்தினம் நடைபயணத்தையும் ஷெரீப் கட்சியினர் தொடங்கினர்.
இந்த நிலையில் சர்தாரியின் மீது அதிருப்தி அடைந்த பிரதமர் கிலானியும் அவருக்கு எதிராக திரும்பினார். உச்சகட்டமாக சர்தாரிக்கு கெடு விதித்தார் ராணுவ தலைமை தளபதி பர்வேஸ் கயானி.
நாட்டை சீர்படுத்த நடவடிக்கை எடுங்கள், இல்லாவிட்டால் ராணுவம் அந்த பொறுப்பை எடுத்துக் கொள்ளும் என கெடு விதித்து மிரட்டல் விடுத்தார் கயானி.
பாகிஸ்தான் நிலவரம் கலவரமாக மாறி வருவதைப் பார்த்த அமெரிக்காவும், இங்கிலாந்தும் களத்தில் குதித்தன. கிலானி, ஷெரீப் மற்றும் ராணுவ தளபதியுடன் பேசி சமரசம் ஏற்படுத்த முயற்சியுங்கள் என்று அவை அறிவுறுத்தின. மேலும் அமெரிக்க அரசு அதற்கு மேல் ஒரு படி மேலே போய் சர்தாரிக்கு 24 மணி நேர கெடுவும் விதித்தது.
ஆட்சி பறிக்கப்படும் அபாயம், நாடு கடத்தப்படும் அச்சுறுத்தல் வலுக்கவே தனது நிலையிலிருந்து இறங்கி வந்தார் சர்தாரி.
முதல் கட்டமாக ஷெரீப் சகோதரர்களுக்கு விவிஐபிகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை அளிக்க உள்துறை அமைச்சகத்திறகு அவர் உத்தரவிட்டார்.
மேலும், பஞ்சாப் மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்ட ஜனாதிபதி ஆட்சியை நீக்கவும் முடிவு செய்யப்பட்டது.
இதேபோல தலைமை நீதிபதி இப்திகார் செளத்ரி உள்ளிட்ட பிற நீதிபதிகளை மீண்டும் பதவியில் நியமிக்கவும் சர்தாரி நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
கிலானியுடன் அவசர ஆலோசனை..
நேற்று பிரதமர் கிலானியை அவசரமாக வரவழைத்து முக்கிய ஆலோசனையை நடத்தினார் சர்தாரி.
இந்த திடீர் சந்திப்புக்குக் காரணம், கிலானியை சந்தித்த ராணுவ தலைமைத் தளபதி கயானி விடுத்த மிரட்டல்தான். சர்தாரியிடம் சொல்லி நாட்டில் அமைதியை ஏற்படுத்த முயற்சியுங்கள். இல்லாவிட்டால் ஏற்படும் விளைவுகளுக்கு நீங்கள்தான் பொறுப்பு என கயானி கூறியதே.
இதையடுத்தே கிலானியை வரவழைத்து ஆலோசனை நடத்தினார் சர்தாரி.
திடீர் பல்டி..
இந்த நிலையில், அமெரிக்கா-இங்கிலாந்து பரிந்துரைத்த சமரசத் திட்டத்தை திடீரென சர்தாரி நிராகரித்துள்ளார். நெருக்குதலுக்குப் பணிய முடியாது எனவும் அவர் அறிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் பணிந்து போவது போல நடந்து கொண்ட சர்தாரி, தனது நெருங்கிய வட்டாரத்தினரின் அறிவுரையின்ப பேரில் தற்போது தனது நிலையை மாற்றிக் கொண்டு விட்டதாக தெரிகிறது.
ஷெரீப் கட்சியினர் நடத்தி வரும் பாதயாத்திரை வருகிற 15ம் தேதி இஸ்லாமாபாத்தில் முடிகிறது. அதற்குப் பிறகே எந்தவித சமரசத் திட்டத்தையும் தான் பரிசீலிக்கப் போவதாக சர்தாரி, ராணுவத் தளபதியும் கூறி விட்டதாக தெரிகிறது.
சர்தாரி திடீரென பல்டி அடித்திருப்பது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து தரப்பை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. நவாஸ் ஷெரீப், பிரதமர் கிலானி மற்றும் ராணுவத் தளபதி கயானி ஆகியோரை சமரசத்திற்கு ஒப்புக் கொள்ள வைத்து விட்ட நிலையில் சர்தாரி பல்டி அடித்திருப்பதால் பாகிஸ்தான் அரசியலில் பெரும் குழப்பம் ஏற்படும் என இரு நாடுகளும் அஞ்சுகின்றன.
கிலானியுடன் கயானி அவசர ஆலோசனை..
சர்தாரி சமரசத் திட்டத்தை நிராகரித்து விட்டதால் அதிருப்தி அடைந்துள்ள கயானி, நேராக பிரதமர் கிலானியைப் போய் பார்த்து பேசியுள்ளார். இருவரும் முக்கிய ஆலோசனைகளை நடத்தியுள்ளனர்.
இருவரும் இணைந்து மீண்டும் சர்தாரியுடன் பேச முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இஸ்லாமாபாத்தை ஷெரீப் கட்சியினரின் பாதயாத்திரை அடைவதற்குள் சர்தாரியை சமாதானப்படுத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புரட்சி வராது..அமெரிக்கா நம்பிக்கை:
இதற்கிடையே, பாகிஸ்தானில் நிலைமை மோசமாக இருந்தாலும் கூட அங்கு ராணுவப் புரட்சி வராது என்று அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க முப்படைகளின் தலைமைத் தளபதி மைக்கல் முல்லன் கூறுகையில், பாகிஸ்தான் தளபதி பர்வேஸ் கயானி ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுடன் இருப்பவர். அவர் புரட்சி செய்ய மாட்டார் என கருதுகிறோம்.
முஷாரப் செய்தது போல அவர் செய்ய மாட்டார் எனவும் நம்புகிறோம். பாகிஸ்தான் அரசு நிர்வாகம் மிக மோசமாக செயல்படுவது குறித்து சில முறை என்னிடம் வருத்தத்தை வெளிப்படுத்தினார் கயானி. அப்போதெல்லாம் அவரை நான் சமாதானப்படுத்தினேன்.
கிட்டத்தட்ட பத்து முறை கயானியுடன் நான் பேசியிருக்கிறேன். பாகிஸ்தானுக்கு நல்லது செய்ய அவர் விரும்புகிறார். இருப்பினும் புரட்சி வரைக்கும் அவர் போக மாட்டார் எனவே நான் கருதுகிறேன் என்றார் முல்லன்.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு












Click it and Unblock the Notifications