ராணுவம்-புலிகள் போர்க் குற்றம்: ஐ.நா.
ஜெனீவா: இலங்கையில், ராணுவமும், விடுதலைப் புலிகளும் போர்க் குற்றங்களுக்குச் சமமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இரு தரப்பும் போரை நிறுத்த வேண்டும் என ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவி பிள்ளை கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து நவி பிள்ளை கூறுகையில், யாருமே எதிர்பார்க்க முடியாத அளவுக்கு மிகப் பெரிய அளவிலான உயிரிழப்புகள் ஏற்படும் சூழ்நிலையை நோக்கி இலங்கை போர் சென்று கொண்டிருக்கிறது. அரசுத் தரப்பும், விடுதலைப் புலிகளும் உடனடியாக சண்டையை நிறுத்த வேண்டும். இதன் மூலம் அப்பாவி மக்களை மீட்க வழி ஏற்படும்.
பாதுகாப்பு வலையப் பகுதிகளில் தொடர் தாக்குதல்..
பாதுகாப்பு வலையம் என அரசே அறிவித்த பகுதிகளில் தொடர்ந்து இலங்கை ராணுவம் குண்டு வீசித் தாக்குதல் நடத்தி வருகிறது. அதேபோல அப்பாவி மக்களை பிணைக் கைதிகள் போல விடுதலைப் புலிகள் பிடித்து வைத்துள்ளனர்.
இதுபோன்ற நடவடிக்கைள் சர்வதேச மனித உரிமை சட்டத்தை மீறுவதாகும். பெரும் மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் இவை.
இதுபோன்ற குற்றங்கள், போர்க் குற்றங்களுக்கு சமமானவை. மனித குலத்திற்கு எதிரான போர் குற்றங்கள் இவை.
தற்போது அங்கு ஏற்பட்டு வரும் உயிரிழப்புகள் மிகவும் அதிர்ச்சி தருவதாக உள்ளன. இன்னும் ஏராளமான பேர் உயிரிழக்கும் அபாயமும் உள்ளது என்று பிள்ளை கூறியுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த தமிழர் நவி பிள்ளை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் ஐ.நா. போர்க் குற்றங்களுக்கான டிரிப்யூனலில் நீதிபதியாகவும் இவர் பணியாற்றியவர்.
இலங்கைக்கு ஆக்கப்பூர்வமாக உதவுவது இந்தியா மட்டுமே - இலங்கை அமைச்சர்
இதற்கிடையே, மற்ற நாடுகள் இலங்கைக்கு அறிவுரை சொல்லிக் கொண்டிருக்கின்றன. ஆனால் இந்தியாதான் இனப்பிரச்சினையைத் தீர்க்க இலங்கைக்கு பேருதவி செய்து கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார் இலங்கை சுகாதாரம் மற்றும் ஊட்டச் சத்துத் துறை அமைச்சர் நிமல சிரிபாலா டிசில்வா.
இதுகுறித்து கொழும்புக்கு வந்திருந்த இந்திய மருத்துவக் குழுவினரிடையே சிரிபாலா டிசில்வா கூறுகையில், இனப்பிரச்சினையைத் தீர்க்க இந்தியாதான் ஆக்கப்பூர்வமான உதவிகளை செய்து வருகிறது. மற்றவர்கள் எல்லாம் இதுகுறித்து பேசிக் கொண்டும், அறிக்கை விட்டபடியும்தான் இருக்கிறார்கள்.
இந்தியாவோ அப்படியல்லாம் இலங்கைக்கு எந்தவித உத்தரவையும் பிறப்பிக்காமல், எந்தவித நிபந்தனையும் இல்லாமல், உதவி செய்ய முன்வந்திருக்கிறது. மருத்துவ உதவிகளையும் அளித்துள்ளது.
தமிழ் மக்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகளையும், தேவையான உதவிகளையும் இந்தியா செய்வதை வரவேற்கிறோம். இதன் மூலம் இப்பகுதி மக்களுக்கு தரமான மருத்துவ உதவிகள் கிடைக்கும் என்றார் அவர்.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங்












Click it and Unblock the Notifications