கர்நாடக காங். தேர்தல் பொறுப்பாளராக எஸ்.ஆர்.பி நியமனம்
சென்னை: கர்நாடக மாநில காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளராக தமிழக மூத்த காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் மேலிடம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கர்நாடகத்தில் தற்போது பாஜக ஆட்சி உள்ளது. இந்த நிலையில் வரும் லோக்சபா தேர்தலில் அங்கு அதிக இடங்களைப் பிடிக்க தேவெ கெளடாவின் மதச்சார்பற்ற ஜனதாதளம் தீவிரமாக உள்ளது.
சமீபத்தில் 3வது அணியின் தொடக்க விழாவையும் கெளடா கர்நாடகத்திலேயே நடத்தினார். அவரது செல்வாக்கு மீண்டும் விஸ்வரூபம் எடுத்து விடாமல் தடுக்கும் வகையில் பாஜக வியூகங்களை வகுத்து வருகிறது.
இவர்களுக்கு இடையில் சிக்கியுள்ள காங்கிரஸ் விழுந்து போன தனது பலத்தை தூக்கி நிறுத்த கடும் முயற்சிகளில் இறங்கியுள்ளது.
இந்த நிலையில் கர்நாடக மாநில காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளராக எஸ்.ஆர்.பி நியமிக்கப்பட்டுள்ளார். கர்நாடக மாநில காங்கிரஸ் தேர்தல் பணிக்குழுவை ஒருங்கிணைத்து எஸ்.ஆர்.பி வழி நடத்துவார்.












Click it and Unblock the Notifications