பெங்களூர் தமிழ் ஜோதிடர் மனைவியுடன் கைது
பெங்களூர்: அமெரிக்கா சென்று ஜோதிடம் பார்க்கும் ஆசையில் போலி ஆவணங்கள் கொடுத்து விசா வாங்க முயற்சித்த பெங்களூரைச் சேர்ந்த தமிழ் ஜோதிடர் மற்றும் அவரது மனைவியை சென்னை ராயபேட்டை போலீசார் நேற்று கைது செய்தனர்.
பெங்களூர் எலகண்டாவை சேர்ந்தவர் நாகேந்திரன்(36). ஜோதிடராக பணியாற்றி வந்த இவர் அமெரிக்கா சென்று ஜோதிட தொழிலில் ஈடுபட நினைத்தார். இதையடுத்து சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தில் தனக்கும், தனது மனைவி சுகுணா (26) என்பவருக்கும் சுற்றுலா விசா வழங்க வேண்டுமா என கோரி விண்ணப்பம் செய்தார்.
இந்நிலையில் அவர்கள் நேற்று துணை தூதரகத்துக்கு நேரடி விசாரணைக்கு வந்தனர். அப்போது அவர் கொடுத்த பான் கார்டு மற்றும் வருமான வரி சான்றிதழ்கள் பொய் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து தூதரக அதிகாரிகள் சென்னை ராயபேட்டை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் இவர்கள் இருவரையும் கைது செய்து, வழக்கு பதிவு செய்தனர். இது குறித்து துணை கமிஷனர் மவுரியா, உதவி கமிஷனர் சைலேத்திராஜ் ஆகியோர் நேரடியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விசாரணையில் நாகேந்திரா கூறுகையில், போலி ஆவணங்களை தாக்கல் செய்தால் உடனடியாக விசா பெற்றுவிடலாம் என புரோக்கர் ஒருவர் கூறியதை அடுத்து இவ்வாறு செய்தேன். அடுத்தவர் பேச்சை நம்பி மோசம் போய்விட்டேன் என்றார் நாகேந்திரா.
இதேபோல தகவல் தொழில்நுட்ப என்ஜினியராக வேலை பார்ப்பதாக போலி ஆவணம் கொடுத்த ஐதராபாத்தை சேர்ந்த முகமது கலீல் (30) என்பவரும் கைது செய்யப்பட்டார். இதையடுத்து நேற்று மட்டும் அமெரிக்க துணை தூதரகத்தில் போலி ஆவணம் கொடுத்து கைதானவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.
-
நேரில் வாங்க அண்ணாமலை.. பாஜக மேலிடம் போட்ட திடீர் உத்தரவு.. சென்னையில் மோடியுடன் முக்கிய மீட்டிங் -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
அதிகாலையில் ஷாக்! தாறுமாறாக உயர்ந்த விமான கட்டணம்! சென்னை-தூத்துக்குடிக்கு டிக்கெட் ரேட்டை பாருங்க -
கடும் கோபத்தில் மோடி.. சென்னை ரோடுஷோ - பிரசாரமே வேண்டாம்.. பாஜக தலைகளை பந்தாட தயாராகும் மேலிடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
LPG கேஸ் சிலிண்டர் பதுக்கினால் குண்டர் சட்டம் பாயும் - தமிழ்நாடு அரசு அதிரடி எச்சரிக்கை! -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்!











Click it and Unblock the Notifications