பெங்களூர் தமிழ் ஜோதிடர் மனைவியுடன் கைது
பெங்களூர்: அமெரிக்கா சென்று ஜோதிடம் பார்க்கும் ஆசையில் போலி ஆவணங்கள் கொடுத்து விசா வாங்க முயற்சித்த பெங்களூரைச் சேர்ந்த தமிழ் ஜோதிடர் மற்றும் அவரது மனைவியை சென்னை ராயபேட்டை போலீசார் நேற்று கைது செய்தனர்.
பெங்களூர் எலகண்டாவை சேர்ந்தவர் நாகேந்திரன்(36). ஜோதிடராக பணியாற்றி வந்த இவர் அமெரிக்கா சென்று ஜோதிட தொழிலில் ஈடுபட நினைத்தார். இதையடுத்து சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தில் தனக்கும், தனது மனைவி சுகுணா (26) என்பவருக்கும் சுற்றுலா விசா வழங்க வேண்டுமா என கோரி விண்ணப்பம் செய்தார்.
இந்நிலையில் அவர்கள் நேற்று துணை தூதரகத்துக்கு நேரடி விசாரணைக்கு வந்தனர். அப்போது அவர் கொடுத்த பான் கார்டு மற்றும் வருமான வரி சான்றிதழ்கள் பொய் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து தூதரக அதிகாரிகள் சென்னை ராயபேட்டை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் இவர்கள் இருவரையும் கைது செய்து, வழக்கு பதிவு செய்தனர். இது குறித்து துணை கமிஷனர் மவுரியா, உதவி கமிஷனர் சைலேத்திராஜ் ஆகியோர் நேரடியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விசாரணையில் நாகேந்திரா கூறுகையில், போலி ஆவணங்களை தாக்கல் செய்தால் உடனடியாக விசா பெற்றுவிடலாம் என புரோக்கர் ஒருவர் கூறியதை அடுத்து இவ்வாறு செய்தேன். அடுத்தவர் பேச்சை நம்பி மோசம் போய்விட்டேன் என்றார் நாகேந்திரா.
இதேபோல தகவல் தொழில்நுட்ப என்ஜினியராக வேலை பார்ப்பதாக போலி ஆவணம் கொடுத்த ஐதராபாத்தை சேர்ந்த முகமது கலீல் (30) என்பவரும் கைது செய்யப்பட்டார். இதையடுத்து நேற்று மட்டும் அமெரிக்க துணை தூதரகத்தில் போலி ஆவணம் கொடுத்து கைதானவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.
-
சென்னையில் தங்க ரதம்.. கண்டக்டர் இல்லாத பஸ்கள் அறிமுகம் செய்த அரசு.. எந்த ரூட்டில் இயக்கம்? -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக்












Click it and Unblock the Notifications