திமுகவுக்கு நாடார் பேரவை ஆதரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளிப்பதாக நாடார் பேரவை அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் என்.ஆர்.தனபாலன் செய்தியாளர்களிடம் கூறுகையில், திமுக அரசுக்கு இன்னும் இரண்டரை ஆண்டு காலம் பதவிக்காலம் உள்ளது. எனவே திமுக கூட்டணிக்கு ஆதரவு தந்தால்தான் நாடார் சமுதாயத்தினரின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

அதன் அடிப்படையில் வரும்லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தர முடிவு செய்துள்ளோம்.

திமுக அரசும் சரி, அதிமுக அரசும் சரி இதுவரை இருந்த காலத்தில் நாடார் சமுதாயத்தினருக்கு பெரிய அளவில் எதுவும் செய்யவில்லை. இருப்பினும் தற்போதைய திமுக அரசு நாடார் சமுதாயத்தினரின் வேதனைகளையும், கோரிக்கைகளையும் புரிந்துள்ளது. அந்த அடிப்படையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தருகிறோம்.

லோக்சபா தேர்தலை நாங்கள் புறக்கணிக்க மாட்டோம் என்றார்.

உடன் இருந்த பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ் கூறுகையில், நாடார் பேரவையி்ல 10 லட்சம் பதிவு பெற்ற உறுப்பினர்கள் உள்ளனர். 234 சட்டசபைத் தொகுதிகளிலும் 1 கோடி நாடார் சமுதாயத்தினர் பரவலாக உள்ளனர் என்றார்.

திமுக தேர்தல் அறிக்கை குழு அறிவிப்பு:

திமுக தேர்தல் அறிக்கையை தயாரிக்க குழு ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் அறிக்கைக் குழுவின் தலைவராக நாகநாதன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக தேர்தல் அறிக்கையை தயாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் அமைப்பாளராக மு.நாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

உறுப்பினர்களாக எஸ்.பி.சற்குணபாண்டியன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா, டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் இடம் பெறுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+