அரவாணிகள் பிரசாரம்-வாழ்த்தி அனுப்பிய விஜயகாந்த்
Subscribe to Oneindia Tamil

தேமுதிக தலைமைக் கழக அலுவலகத்திற்கு நேற்று அரவாணிகள் சிலர் திரண்டு வந்தனர். அவர்கள் சேலத்தைச் சேர்ந்தவர்கள்.
அனைவரும் விஜயகாந்த்தை சந்திக்க விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களை விஜயகாந்த் சந்தித்தார். அப்போது அரவாணிகள், தாங்கள் தமிழகம் முழுவதும் தேமுதிகவுக்காக பட்டி தொட்டியெங்கும் பிரசாரம் செய்யப் போவதாக தெரிவித்தனர்.
இதையடுத்து அவர்களை ஆசிர்வாதம் செய்து அனுப்பி வைத்தார் விஜயகாந்த்.
பிரசாரம் செய்யப் போவது குறித்து அரவாணிகள் கூறுகையில், விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க.வை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வது என்று ஏற்கனவே நாங்கள் முடிவு செய்திருந்தோம். அதன்படி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறோம் என்றனர்.












Click it and Unblock the Notifications